Kanavil Nijam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kanavil Nijam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 மார்ச், 2012

கரண்ட் கட்!!

கரண்ட் கட்!!

ஜெனரேட்டர் ஆட்சியில்
ஜெ முதல் மந்திரி


மின்மினி வெளிசத்தை
நகர குழந்தைகள் ரசிக்க செய்யும்

நிலவின் ஒளியை
மீண்டும் கவனிக்க செய்யும்

உழைக்காதவரையும்

வியர்வை சிந்தவைக்கும்


படித்தவரை

புத்தகம் மறக்க செய்யும்

21 ஆம் நூற்றாண்டிலும்
கற்காலம் தலை காட்ட வைக்கும்

ஆனால்

டாஸ்மாக் பக்கம் மட்டும்
கூட்டம் குறைக்க தடுமாறும்
:-)

தமிழக அரசின் இப்போதைய இரண்டு கண்கள் -  டாஸ்மாக் , மின்சாரம்






கரண்ட் கட்!! 


அம்மாக்களுக்கு கிரிகெட்டிலிருந்தும்
அப்பாக்களுக்கு மெகா தொடரிலிருந்தும்
பிள்ளைகளுக்கு செய்திகளிலிருந்தும்
விடுதலை !




ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பொங்கல்??




ஒவ்வொரு நொடியும்.
கரும்பைப் போல் இனித்திட
கதிரவன் போல் ஒளிர்ந்திட
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..


இந்நாள்..

தினம் முன் விழித்து நம்மை எழுப்பும்
கதிரவனை முதுகில் தட்டிக்கொடுக்கும் நாள்

"தானே" கடந்து, தன் கடன் மறந்து, ஒரு நாள்
தன் கண்ணீர் மறக்க நினைக்கும் உழவர் திருநாள்

உண்ணும் உணவின் கதை விதைத்து
காணாமல் போகும் இவர்களை தேடும் நாள்

"உலக தொலைக்காட்சியில் முதன்முறை"யாக
பல வரலாற்றுகளை உருவாக்கும் நாள்..


சினிமா நடிகர்களும்,சாலமன் பாப்பையாவும்,  
மட்டும் நம் உறவுகளான நாள்


நகர தீப்பெட்டி வீடுகளில் இன்டெக்ஷன் அடுப்பகளில்
குக்கர் திருநாள்

தமிழ் புத்தாண்டின் முதல் நாளா? இல்லையா?
என்ற குழப்பத்தை அரசியலாக்கும் நாள்

தமிழக அரசை வாழவைக்கும் டாஸ்மாக் கடைகளில்
குடிக்காரத் தமிழனின் தன்மான திருநாள்

இவை எதையும் யோசிக்காத , யோசிக்க நேரமில்லாத
இயந்திர வாழ்க்கையில் காரணம் மறந்து,
விடுமுறையாக மட்டும் பதிவான மற்றுமொரு நாள்!!

சனி, 14 ஜனவரி, 2012

ஜருகண்டி



கோவில்
தன்னை சுற்றி உள்ள கடவுளை...
கூண்டுக்குள் வைத்து அழகு பார்க்க.
மனிதனின் யுக்தி..  

கோவில்
மனிதனிடமிருந்து.. தன்னை காத்துக்கொள்ள.. 
இறை.. தேடிய.. தனிமை அறை

திருப்பதி கோவிலில்
அர்ச்சனை அபிஷேகங்களை விட.. 
கடவுள் அதிகம் கேட்கும் வார்த்தை 
"ஜருகண்டி"   !!

மனிதர்கள்
சிலர்..
கடவுள் முன் மட்டும் உத்தமனாய் நடித்து, 
பொருள் கொடுத்து வரம் தேடும் ..வியாபாரிகள்
சிலர்...
கடவுளின் முன் பாவங்கள் என்பதே இல்லை 
என்ற நம்பிக்கை உடைய.. பாவிகள்
சிலர்..
கடவுள்களையும் பாவங்களையும்... மனதில்.
சுமக்கும்.. உத்தமர்கள்...
பலர்..
கடவுள், பாவம், சக மனிதர்கள் - இவை எவற்றையும்..
கண்டு கொள்ளாத இயந்திரங்கள்...



ஞாயிறு, 11 டிசம்பர், 2011

கண்ணாடி. .முன்னாடி.. எது??




ஒவ்வொரு முறையும்
கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது தோன்றுவது !!!

என்னை போல் தோற்றம் கொண்டு கண்ணாடி உலகில் வாழ்பவன் நிஜமா?
நான் அவனது பிம்பமா? யார் நிஜம் - யார் பிம்பம்??

முகம் பார்க்க தோன்றும் போது மட்டும் நாங்கள் சந்தித்துக்கொள்வது ஏன்?

திடீரென ஒரு நாள்,  எங்களில் ஒருவர் கண்ணாடி முன் / பின் தோன்றாவிட்டால் மற்றவரின் நிலை தான் என்ன??

ஒருவேளை எங்களில் ஒருவர் அழகாய் இருந்து மற்றொருவர் அழகற்றவராய் இருந்திருந்தால், இருவரின் வாழ்க்கை தான் எப்படி மாறியிருக்கும்??
பொய் என்னும் உலகிலேயே வாழ்ந்து இருப்போம் இருவரும்...

நாம் தினம் தினம் முகம் பார்த்து ரசிக்கும் கண்ணாடிகள்...
வேறு உலகின்... கதவுகளாகவும்.... ஜன்னல்களாகவும்..இருந்திருந்தால்???..

நிஜம்..
பிம்பம்...
எது நான்?
கண்ணாடி. .முன்னாடி.. எது??

திங்கள், 17 அக்டோபர், 2011

கூரை , நான் , கொசு வலை


ஓர் கூரை
ஓர் கூரையின் கீழ் வாழ்வதென்பதன் 
உண்மையான அர்த்தம்...

கவலையில்லை 
வீட்டை பூட்டினோமா என்ற கவலையில்லை..
மாடியில் காய வைத்த வத்தல் கவலையில்லை...
எடுக்க மறந்த குடை கவலையில்லை...

என் கவலை .... 
இந்த மழை முடியும் வரை... என் கூரை தாங்குமா?
என் கவலை...
இந்த மழை முடியும் வரை... என் குடும்பம் பசி தாங்குமா?




மற்றும் நான்
நாளை சைக்கிள் ஓட்டத் தேவையானவை
சைக்கிள் மற்றும் உயிருடன் நான்!!

சொத்து
என் தாத்தா விட்டு சென்ற ஓரே சொத்து...
என் தாத்தாவிடம் கூட்டி செல்கிறது..


என் வீடு
என் வீட்டுச் சுவர்களை நான் பார்த்தில்லை...
என் வீட்டு நட்சத்திர கூரையை தொட்டதில்லை...
இவ்வளவு பெரிய வீடு இருந்தும்...
கொசு வலை கட்டும் போது மட்டும் சற்று சிரமப்படுகிறேன்...

கொசு வலை
தினம் தினம் பல நூறு கொசுக்கள்
தங்கள் குழந்தைகளை கூட்டி செல்லும்..
மனிதக்காட்சி சாலை....


கொசு வலை
இரையே வலை விரிக்கும் விசித்திரம்


புதன், 12 அக்டோபர், 2011

இரவில்லா நாட்கள்

கனவு ஏது
உறக்கம் ஏது..
ஓய்வு ஏது...

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

ஓட்டம் உண்டு
ஏக்கம் உண்டு..
கோபம் உண்டு...

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

தான் மட்டும்..
பணம் மட்டும்
பொய் மட்டும்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

வலி கொஞ்சம்..
பழி கொஞ்சம்
பாவம் கொஞ்சம்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

நிலவு வேண்டும்..
குளிர்க்காற்று வேண்டும்
இருளும் வேண்டும்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

போதும் ... போதாது

போதாது என்றால் ...
எதுவும் போதாது தான்..

போதும்.. என்றால்
செலவுகள் குறையும்
கனவுகள் மறையும்..
ஏக்கங்கள் தீரும்...
நிம்மதி வளரும்...
வாழ்க்கை ஓரிடத்தில் நின்றபடி ஓடும்...

போதும் என்பதா.... போதாது என்பதா??
இந்த குழப்பம் தான் - மனிதனோ??



ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

மாற்றம்

"நீ சுத்தமா மாறிட்ட"
இது பாராட்டா? அல்லது விமர்சனமா?

நாம்..
உருவத்தில், செயலில் , சிந்தனையில்...
மாற்றத்தை ஏற்க மறுப்பது ஏன்?

தன்னுடைய மாற்றத்தை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளும் மனிதன்..
தன்னை சுற்றி உள்ள மனிதரின்
மாற்றத்தை ஏற்க மறுப்பது ஏன்?

இது எப்படி இருந்தாலும்...
மாற்றம் ஏற்க மறுக்கும்
மனிதனின் விசித்திரமும் மாறும்,

மாற்றம் ஒன்றே நிரந்திரம்..

திங்கள், 20 ஜூன், 2011

ஒன்றினுள் ஒன்று

தூக்கம்
தினம் தினம் .. சுகம்
நிரந்தரமானால்... சோகம்..


கனவு
உழைப்பாளியின் வரம்
சோம்பேறியின் சாபம்


வரம்
வாழ்க்கை புரிந்தவனுக்கு மகுடம்,
வாழ்க்கை தொலைத்தவனுக்கு பாரம்


சாபம்
நிரந்தர தூக்கத்தை எண்ணி,
இன்று சுவாசிக்க மறக்கடிக்கும் எண்ணம்..


பயம்
எண்ணங்கள் புவி அளவு படர
புவியின் பாரத்தை மனதில் சுமக்க
பாரமே எண்ணங்களாகி
பின், வாழ்க்கையே பாரமாகும் - பயம்

சனி, 22 ஜனவரி, 2011

அன்பு நண்பனுக்கு

தோல்விகள் மலையென குவிந்த பின்பு,
சொந்தங்கள் சோகங்களான பின்பு,
முயற்சிகள் முற்றும் துறந்த பின்பு,
உலகத்திற்கும் தனக்கும் விவாகரத்தான பின்பு,
சுவாசிப்பது பெரும் பணியான பின்பு,
வாழ்வின் அர்த்தம் அபத்தமான பின்பு,
எதற்கு வாழ்க்கை என்றான பின்பு,

என் அன்பு நண்பனுக்கு,
நான் சொல்ல நினைப்பது...

ஒரு முறை
வெற்றிகளின் மலையை அடைந்திட .. ,

சொந்தங்களை சந்தோஷங்களாக்கிட.. , 
முயற்சிகள் புன்னகையில் முடிந்திட.. ,
உலகத்தை தன்னுள் உணர்ந்திட..,
சுவாசிப்பதை செயலில் மறந்திட, 
வாழ்வின் பொருள் "நீ" என்றுணர்ந்திட,

இன்று நீ புதிதாய் பிறந்தாய் என எண்ணிக்கொள் , 
இந்த நண்பன் ..தோள் கொடுத்திட,. வாழ்வின் கை பற்றிக்கொள்!!

வியாழன், 20 ஜனவரி, 2011

வாழ்வில் வென்றிட

வாழ்வில் வென்றிட வேதாத்ரி மகரிஷி சொன்ன ரகசியம்... :-)

"முடியும்! முடியும்! என்னால் முடியும்,
முயற்சி செய்தால் எதுவும் முடியும்,

வாழ்வேன்! வாழ்வேன்! சிறப்பாய் வாழ்வேன்,
வாழ்வேன்! வாழ்வேன்! என் மனம் ஒன்றி வாழ்வேன்,

தருவேன்! தருவேன்! அள்ளித் தருவேன்,
அன்பையும் கருணையும் அள்ளித் தருவேன்,

நான் தன்னம்பிக்கை மிக்கவன்,
நான் ஆற்றல் மிக்கவன்,
நான் சக்தி மிக்கவன்,
நான் சுறுசுறுப்பானவன்,
நான் சந்தோஷமானவன்,
நான் கனவுகளை நிஜமாக்குபவன்,

முடியும்! முடியும்! என்னால் முடியும்,

முயற்சி செய்தால் எதுவும் முடியும்,

வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்!
வாழ்க வளமுடன்!"

என்பதை இரவு தூங்கும் முன்பும், காலை எழுந்தவுடனும் 1 வருடம் தொடர்ந்து சொன்னால்.... வாழ்வில் வெற்றி நிச்சயமாம்!!!

இதை முயற்சி செய்து , உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!!


திங்கள், 10 ஜனவரி, 2011

உழவர் திருநாள் - உதவி திருநாள்

ஏழை விவசாய குடும்பங்கள் உழவர் திருநாள் கொண்டாடிட...
நாம், ஆளுக்கோர் ஏழை விவசாய குடும்பத்தை தத்தேடுத்தால் என்ன??

உங்கள் கருத்து.. ??

விவசாயிகளுக்கென்று இயங்கும் நிறுவனங்கள் இதனை செய்கின்றனவா??
விவசாயிகளை நேரடியாக சென்றடையும் தளங்கள் ??

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!


ஆனந்த விகடனில் வெளியான .... நாஞ்சில் நாடன் பேட்டியின் ஒரு பகுதி....


''சினிமா மட்டும்தான் தமிழ் கலாசாரத்துக்கு அபாயமானதா என்ன?''
''கலாசாரம் என்பது எப்போதும் நிலையான ஒன்று இல்லை. அது மாறிக்கொண்டே இருப்பது. ஆனால், மரபைக் கணக்கில் எடுக்காத கலாசார மாற்றம் பாழ். அற மதிப்பீடுகளும் ஒழுக்க விழுமியங்களும்தான் ஒரு பண்பாட்டின் வேர்கள். தமிழ் சினிமாதான் தமிழ் சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. தமிழ் சமூகம் அளவுக்குச் சினிமாவின் கேடுகளை உள்வாங்கிக்கொண்ட சமூகம் வேறு எதுவும் கிடையாது. அதுபோக, அரசியலும் ஊடகமும் கல்வியும் நம் சமூகத்தை நாசம் செய்துகொண்டு இருக்கின்றன. கறிக்கோழியை வளர்ப்பதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெற்றோர்களிடம் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பிராய்லர் கோழியை வளர்ப்பதைப்போல பிள்ளைகளை வளர்த்தால், அந்தச் சமூகம் எப்படி உருப்படும்? படிப்பு, வேலை இதைத் தவிர, மனித வாழ்க்கைக்கு அர்த்தங்களே இல்லையா? குறிக் கோள்களே இல்லையா? நமது சமூகம் எப்படி மதிப்பீடுகளை இழந்துகிடக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் எனக்கு பி.எஸ்.என்.எல்லில் இருந்து ஒருதொலை பேசி அழைப்பு. எடுத்துப் பேசினால், 'ஹாய், மச்சான் சௌக்கியமா?’ என்றது. அது ஒரு பதிவு செய்யப்பட்ட குரல். எதிர்முனையில் இருப்பவர் யார்?  எழுத்தாளரா, கொலைகாரரா, ஆசிரியரா, நோய்வாய்ப்பட்டவரா, அவருக்கு என்ன வயது இருக்கும் என்று எந்தக் குறைந்த பட்ச அறிவும் இல்லாமல் கூவுகிற வியாபாரக் குரல்கள் என்னை இம்சை செய்கின்றன!''

''இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே?''

''உண்மைதான். தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம். ஆனால், இப்போது உள்ள மாணவர்களோ, 'மானாட மயிலாட’ பார்ப்பதற்குச் செலவழிக்கும் மணித் துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு, இன்று எந்தத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதிகூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள். நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?
இன்று ஸ்பெக்ட்ரமில்  1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம். ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன்.

எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

கடைசி கடிதம் எப்போது??

என் தாய் தந்தைக்கு... கைப்பட எழுதிய சில வரிகள்..  
வாழ்வில் முதல் முறை புத்தாண்டு வாழ்த்தின் அர்த்தம் உணர்ந்தேன்...

நீங்கள் கடைசி முறை கைப்பட கடிதம் எழுதியது எப்போது??

வியாழன், 23 டிசம்பர், 2010

மீண்டும் வெங்காயம்

வெங்காய விலை பற்றி பெரியாரிடம் தான் கேட்க வேண்டும்: கருணாநிதி

வெங்காயத்தின் ஏற்றத்தால்... மட்டுமே
பெரியாரை நினைவுகோரும் கருணாநிதி...

:-D

இது ...பிரென்ச் புரட்சிக்கு முன் ராணி மேரி..
"பிரெட் இல்லையென்றால் கேக் சாப்பிடட்டும்" .. என்றது போல் உள்ளது..

ஆனால்

இலவச டி.வி , அரிசி , ஓயின் ஷாப் மற்றும் ஓட்டு போட பணம் இருக்கும் வரை ...
தமிழகமும் / தமிழர்களும் புரட்சி புஸ்வானங்கள் தான் :-)
  

புதன், 8 டிசம்பர், 2010

மெளனம்


எதையும் தாங்கும் இதயம் ...
உன் மெளனத்தின் பாரத்தால் நொறுங்கும்..வரை.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

உடல் உயிர்



உடல் - உயிர் இதில் நிஜம் எது?
உடலின்றி உயிரின் பலன் என்ன?
உயிரின்றி உடலின் பொருள் என்ன்?

சில நாட்கள்..
உடல்களின் துணை மட்டும்..நிஜம்
சில நாட்கள்..
உயிர் மேல் ஆசை மட்டுமே ... நிஜம்
பல நாட்கள்..
உடல் - உயிர் மறப்போம்

வாழ்க்கையெனும் கனவில்..

சனி, 10 ஜூலை, 2010

சரி... நீங்கள் சொல்ல நினைப்பது தான் என்ன?

Pakistan suicide blasts in Mohmand 'kill more than 100'
Iraq suicide bomb attack kills five
8 injured in train derailment following blast in NE India

மேல் உள்ள தலைப்பு செய்திகளில் ஓர் ஒற்றுமை - இவையாவிலும் பலியானவர்கள் எல்லோரும் உன்னை - என்னை போன்ற...சராசரி மனிதர்கள்.

ஓர் சராசரி மனிதனின் உயிரை கொன்று இவர்கள் சொல்ல நினைப்பது தான் என்ன?
அரசாங்கத்தை / அதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தில் ஏன் சராசரி மனிதனே பலியாகிறான்?

சராசரி மனிதனின் உயிரை ஓட்டு எண்ணிக்கையாக மட்டும் கருதும் அரசாங்கத்தின் / அரசியல்வாதிகளின் மனதில் இந்த உயிர் பலிகள் என்ன மாற்றத்தை கொண்டு வரப்போவதாக எண்ணுகிறார்க்ள்??

முகம் தெரியாத அரசாங்கம்
பல முகங்கள் கொண்ட "இவர்கள்"
நடுவில்..
முகம் தெரியாதவனின் அக்கறையின்மையில்..
தினம் தினம் "இவர்களின்" பயத்தில்..
கல்லறையை நோக்கி எனது தின வாழ்க்கை...
நான் ஒரு சராசரி மனிதன்..

செவ்வாய், 12 ஜனவரி, 2010

கோபம் ஊடல் காதல்

கோபம்


















கொஞ்சம் கோபம் ,
கொஞ்சம் முனங்கல்,
உதட்டோரம் மெல்லிய புன்னகை...
என்னை பார்த்தவுடன்....

ஊடல்



















உன்னிடம் பேச தவறிய இன்று உணர்ந்தேன்..
நீ என்னுள் முழுதாய் நிறைந்திருப்பதை.

நான் பேச தவறியது - சில நொடிகள்.
உன் நினைப்பை சுமந்தேன் - நாள் முழுதும்

காதல்


நான் கேட்கக்கூடாது
ஆனால் சொல்லவும் மாட்டாள்
நான் கேட்கமாட்டேன் என்றால்
ஏன் கேட்கமாட்டாய் என்பாள்,
சரி, சொல் என்றால்,
நான் உன்னிடம் சொல்லமுடியாது என்பாள்..

சொல்லாமல் சொல்லினாள் - காதல்!

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

கோப்பையிலே புத்தாண்டு - சீரழியாதே தமிழா!!

புத்தாண்டு மற்றும் பிற விழா நாட்கள் என்றால் தமிழனுக்கு இப்போது தெரிந்த இரண்டே விஷயங்கள்

"சூப்பர் ஹிட் திரைப்படம்"
"குவாட்டர் பாட்டில்"

தமிழ் இனத்தையே சினிமா மோகம் - சிரிப்பு அலைவரிசைகள் -மெகா சீரியல் - என்ற ஒரு மாய வலையில் சிக்க வைத்துள்ள தொலைக்காட்சிகள் ஒரு புறம்.

தன் இனம் அழிவதை கூட அறியாமல் இலவச கலர் டி.வி பெற்று, சூப்பர் ஹிட் படங்களை பார்த்து பண்டிகைகளை கொண்டாடி... பண்டிக்களின் சிறப்பினை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து ...   "தமிழன்" என்ற அடையாளம் தொலைத்து வரும் போற்றத்தகு தமிழர் நாம்..

இவை போததென்று பெருகி வரும் "ஒயின் ஷாப்" தொல்லைகள்!
ஒயின் ஷாப் - அரசியல் கட்சியனர்,  கட்ட பஞ்சாயத்து, ஏலத்திற்கான லஞ்சம் , குடிப்போரை ஏமாற்றும் வேய்டர்கள்,  போலீஸை ஏமாற்றும் குடிமகன்கள் ,ஒயின் ஷாப்பை ஏய்க்கும் போலீஸ்,  பெற்றோரை ஏமாற்றும் மகன்கள்,  குடும்பத்தை ஏமாற்றும் தந்தைமார்கள்... என்று ஒரு பெரிய தொடர்பு உள்ளது...

குடிப்பது தவறில்லை,
நாம் குடிப்பது அடுத்தவரை உடல் அளவிலும்/ மனதளவிலும் தாக்காத வரை..

இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் நம் குடிமகன்கள் செய்த சில அரிய செயல்கள் கீழே பார்க்கலாம் :
Spate of accidents on New Year eve


5 die, 140 hurt on new year eve

சென்னையில் மட்டும் - 140 பேர் , 5 பேர் பலி - இன்னும் எத்தனை பேர் இதனால் மறைமுகமாக அவதி படுகிறார்கள் என்பது இறைவனுக்கே வெளிச்சம்...

இறந்தவர்கள் அணைவரும் 25 வயதிற்கு உட்பட்டோர்.

கனவுகளையும் , சந்தோஷங்களையும் அனுபவிக்க வேண்டிய வயதில்,
மது தரும் போதையையே சந்தோஷமாக நினைத்து..
உயிரை ரோட்டொரங்களில் விடுவதையே தங்கள் கடமையாக கொண்ட இவர்களின் வீரத்தை என்ன வென்று சொல்வது...

மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே..
மக்களை கொன்றிடும் மதுவை விற்பது இதை விட பெரும் கொடுமை...

டாஸ்மாக்கில் 'களைகட்டிய' புத்தாண்டு! - 47 கோடி விற்பனை


டாஸ்மாக்கில் தீபாவளி ஜோர்... விற்பனை ரூ.200 கோடி

இவர்களுக்கு விஷம் அதிக வருவாய் தருமாயின், அதையும் மக்களுக்காக விற்க தயாராக உள்ளவர் தான்!!

ஓர் சிறு குறிப்பு : இலங்கையில் ஒதுங்கிட ஓர் இடமின்றி தவிக்கும் நம் தமிழருக்கு நம் மாநில கட்சிகள் , தமிழ் நாட்டு மக்கள், தொண்டு நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து அளித்த தொகை ஒயின் ஷாப் விற்பனையை விட குறைவு தான்.!!

ஆரோகியமற்ற சமுதாயத்தால் ஒன்றையும் சாதிக்க முடியாது என்பதை உணர வேண்டும்...
ஒழுக்கம் என்ற சொல்லை புரிந்துக்கொள்ள வேண்டும்..

"ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல. நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும்"


சுய ஒழுக்கம் அற்ற எந்த ஒரு சமுதாயமும் முன்னேறியதாக சரித்திரமில்லை.


இதை நம் தமிழினம் நன்கு உணர வேண்டும்...
இந்த அவலத்தை போக்க சில யோசனைகள்:

1) நான் என்றுமே ஏற்க மறுத்த இந்து முன்னணி கட்சி கூட , இந்த விஷயத்தில் சொன்ன கருத்தை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன்..

புத்தாண்டில் மதுக்கடைகளை மூடவேண்டும் - இந்து முன்னணி



2) சினிமா, தொலைக்காட்சி வரும் காமெடியன் முதல் கதாநாயகன் வரை பீர் குடிப்பதை .. மோர் குடிப்பதற்கு ஒப்பிட்டு பேசுவது மிகவும் வருத்தமாக உள்ளது..  வயதிற்கேற்ற குறிபேடுகள் இல்லாத நம் ஊடகங்களில்.. இதை குழந்தைகளும் , இளைஞர்களும் கண்டு நகைச்சுவையாக எடுத்து கொள்வது மேலும் ஒரு அவலம்...

இதை நிறுத்த எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தணிக்கை செய்யவேண்டும்.  மது அருந்துவதையும் , புகை பிடிப்பதையும் கொண்ட நிகழ்ச்சிகளுக்கும் / படங்களுக்கும் "A" சர்டிபிகெட் தர வேண்டும்

3) அரசு மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் ...

ஆரோக்கியமான மக்களே அரசின் உண்மையான சொத்து என்பதை உணர வேண்டும்..

4) ஒயின் ஷாப்பில் அமர்ந்து குடிப்பதற்கான வசதியை ரத்து செய்ய வேண்டும்.
பொது இடங்களில் குடிப்பதையும் தண்டனைக் உட்படுத்த / செயல்படுத்த வேண்டும்.. வீட்டிற்கு சென்று குடிப்பதையே வலியுறுத்த வேண்டும்.. அப்படி குடிக்க முடியாதவர்கள் குடிப்பதை நிறுத்திக்கொள்ளலாம்.

 5) இது அணைத்தும் கடினமாக இருப்பின் - சென்னை நகரின் ஒரு பகுதியை -  "கேளிக்கை நகரமாக்கி" - மற்ற பகுதிகளில் மது கடைகளை மூட வேண்டும்... இதனால் மத்த பகுதிகளில் உள்ள குழந்தைகளும் , பெண்களும் எந்த பயமும் இன்றி ரோட்டில் நடந்து செல்ல முடியும்...

போதையில் - மாயையில் உள்ள தமிழன் விழித்திட வேண்டும்!!