சனி, 14 ஜனவரி, 2012

ஜருகண்டி



கோவில்
தன்னை சுற்றி உள்ள கடவுளை...
கூண்டுக்குள் வைத்து அழகு பார்க்க.
மனிதனின் யுக்தி..  

கோவில்
மனிதனிடமிருந்து.. தன்னை காத்துக்கொள்ள.. 
இறை.. தேடிய.. தனிமை அறை

திருப்பதி கோவிலில்
அர்ச்சனை அபிஷேகங்களை விட.. 
கடவுள் அதிகம் கேட்கும் வார்த்தை 
"ஜருகண்டி"   !!

மனிதர்கள்
சிலர்..
கடவுள் முன் மட்டும் உத்தமனாய் நடித்து, 
பொருள் கொடுத்து வரம் தேடும் ..வியாபாரிகள்
சிலர்...
கடவுளின் முன் பாவங்கள் என்பதே இல்லை 
என்ற நம்பிக்கை உடைய.. பாவிகள்
சிலர்..
கடவுள்களையும் பாவங்களையும்... மனதில்.
சுமக்கும்.. உத்தமர்கள்...
பலர்..
கடவுள், பாவம், சக மனிதர்கள் - இவை எவற்றையும்..
கண்டு கொள்ளாத இயந்திரங்கள்...



0 கருத்துகள்:

கருத்துரையிடுக