ஞாயிறு, 11 டிசம்பர், 2011

கண்ணாடி. .முன்னாடி.. எது??




ஒவ்வொரு முறையும்
கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது தோன்றுவது !!!

என்னை போல் தோற்றம் கொண்டு கண்ணாடி உலகில் வாழ்பவன் நிஜமா?
நான் அவனது பிம்பமா? யார் நிஜம் - யார் பிம்பம்??

முகம் பார்க்க தோன்றும் போது மட்டும் நாங்கள் சந்தித்துக்கொள்வது ஏன்?

திடீரென ஒரு நாள்,  எங்களில் ஒருவர் கண்ணாடி முன் / பின் தோன்றாவிட்டால் மற்றவரின் நிலை தான் என்ன??

ஒருவேளை எங்களில் ஒருவர் அழகாய் இருந்து மற்றொருவர் அழகற்றவராய் இருந்திருந்தால், இருவரின் வாழ்க்கை தான் எப்படி மாறியிருக்கும்??
பொய் என்னும் உலகிலேயே வாழ்ந்து இருப்போம் இருவரும்...

நாம் தினம் தினம் முகம் பார்த்து ரசிக்கும் கண்ணாடிகள்...
வேறு உலகின்... கதவுகளாகவும்.... ஜன்னல்களாகவும்..இருந்திருந்தால்???..

நிஜம்..
பிம்பம்...
எது நான்?
கண்ணாடி. .முன்னாடி.. எது??