திங்கள், 20 ஜூன், 2011

ஒன்றினுள் ஒன்று

தூக்கம்
தினம் தினம் .. சுகம்
நிரந்தரமானால்... சோகம்..


கனவு
உழைப்பாளியின் வரம்
சோம்பேறியின் சாபம்


வரம்
வாழ்க்கை புரிந்தவனுக்கு மகுடம்,
வாழ்க்கை தொலைத்தவனுக்கு பாரம்


சாபம்
நிரந்தர தூக்கத்தை எண்ணி,
இன்று சுவாசிக்க மறக்கடிக்கும் எண்ணம்..


பயம்
எண்ணங்கள் புவி அளவு படர
புவியின் பாரத்தை மனதில் சுமக்க
பாரமே எண்ணங்களாகி
பின், வாழ்க்கையே பாரமாகும் - பயம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக