சனி, 22 ஜனவரி, 2011

அன்பு நண்பனுக்கு

தோல்விகள் மலையென குவிந்த பின்பு,
சொந்தங்கள் சோகங்களான பின்பு,
முயற்சிகள் முற்றும் துறந்த பின்பு,
உலகத்திற்கும் தனக்கும் விவாகரத்தான பின்பு,
சுவாசிப்பது பெரும் பணியான பின்பு,
வாழ்வின் அர்த்தம் அபத்தமான பின்பு,
எதற்கு வாழ்க்கை என்றான பின்பு,

என் அன்பு நண்பனுக்கு,
நான் சொல்ல நினைப்பது...

ஒரு முறை
வெற்றிகளின் மலையை அடைந்திட .. ,

சொந்தங்களை சந்தோஷங்களாக்கிட.. , 
முயற்சிகள் புன்னகையில் முடிந்திட.. ,
உலகத்தை தன்னுள் உணர்ந்திட..,
சுவாசிப்பதை செயலில் மறந்திட, 
வாழ்வின் பொருள் "நீ" என்றுணர்ந்திட,

இன்று நீ புதிதாய் பிறந்தாய் என எண்ணிக்கொள் , 
இந்த நண்பன் ..தோள் கொடுத்திட,. வாழ்வின் கை பற்றிக்கொள்!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக