கரண்ட் கட்!!
ஜெனரேட்டர் ஆட்சியில்
ஜெ முதல் மந்திரி
மின்மினி வெளிசத்தை
நகர குழந்தைகள் ரசிக்க செய்யும்
நிலவின் ஒளியை
மீண்டும் கவனிக்க செய்யும்
உழைக்காதவரையும்
வியர்வை சிந்தவைக்கும்
படித்தவரை
புத்தகம் மறக்க செய்யும்
21 ஆம் நூற்றாண்டிலும்
கற்காலம் தலை காட்ட வைக்கும்
ஆனால்
டாஸ்மாக் பக்கம் மட்டும்
கூட்டம் குறைக்க தடுமாறும்
:-)
தமிழக அரசின் இப்போதைய இரண்டு கண்கள் - டாஸ்மாக் , மின்சாரம்
கரண்ட் கட்!!
அம்மாக்களுக்கு கிரிகெட்டிலிருந்தும்
அப்பாக்களுக்கு மெகா தொடரிலிருந்தும்
பிள்ளைகளுக்கு செய்திகளிலிருந்தும்
விடுதலை !
Thought லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Thought லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 27 மார்ச், 2012
கரண்ட் கட்!!
லேபிள்கள்:
கரண்ட் கட்,
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
Current Cut,
Kanavil Nijam,
Tamil,
Thought
ஞாயிறு, 15 ஜனவரி, 2012
பொங்கல்??
ஒவ்வொரு நொடியும்.
கரும்பைப் போல் இனித்திட
கதிரவன் போல் ஒளிர்ந்திட
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..
இந்நாள்..
தினம் முன் விழித்து நம்மை எழுப்பும்
கதிரவனை முதுகில் தட்டிக்கொடுக்கும் நாள்
"தானே" கடந்து, தன் கடன் மறந்து, ஒரு நாள்
தன் கண்ணீர் மறக்க நினைக்கும் உழவர் திருநாள்
உண்ணும் உணவின் கதை விதைத்து
காணாமல் போகும் இவர்களை தேடும் நாள்
"உலக தொலைக்காட்சியில் முதன்முறை"யாக
பல வரலாற்றுகளை உருவாக்கும் நாள்..
சினிமா நடிகர்களும்,சாலமன் பாப்பையாவும்,
மட்டும் நம் உறவுகளான நாள்
நகர தீப்பெட்டி வீடுகளில் இன்டெக்ஷன் அடுப்பகளில்
குக்கர் திருநாள்
தமிழ் புத்தாண்டின் முதல் நாளா? இல்லையா?
என்ற குழப்பத்தை அரசியலாக்கும் நாள்
தமிழக அரசை வாழவைக்கும் டாஸ்மாக் கடைகளில்
குடிக்காரத் தமிழனின் தன்மான திருநாள்
இவை எதையும் யோசிக்காத , யோசிக்க நேரமில்லாத
இயந்திர வாழ்க்கையில் காரணம் மறந்து,
விடுமுறையாக மட்டும் பதிவான மற்றுமொரு நாள்!!
லேபிள்கள்:
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
திருநாள்,
பொங்கல்,
Kanavil Nijam,
Pongal,
Thought
புதன், 12 அக்டோபர், 2011
போதும் ... போதாது
போதாது என்றால் ...
எதுவும் போதாது தான்..
போதும்.. என்றால்
செலவுகள் குறையும்
கனவுகள் மறையும்..
ஏக்கங்கள் தீரும்...
நிம்மதி வளரும்...
வாழ்க்கை ஓரிடத்தில் நின்றபடி ஓடும்...
போதும் என்பதா.... போதாது என்பதா??
இந்த குழப்பம் தான் - மனிதனோ??
எதுவும் போதாது தான்..
போதும்.. என்றால்
செலவுகள் குறையும்
கனவுகள் மறையும்..
ஏக்கங்கள் தீரும்...
நிம்மதி வளரும்...
வாழ்க்கை ஓரிடத்தில் நின்றபடி ஓடும்...
போதும் என்பதா.... போதாது என்பதா??
இந்த குழப்பம் தான் - மனிதனோ??
லேபிள்கள்:
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
போதாது,
போதும்,
Kanavil Nijam,
Thought
புதன், 22 ஜூன், 2011
வாழ்க்கையெனும் சாலை
வாழ்க்கையெனும் சாலையில்
முயற்சிகள் எல்லாம் மைல்கற்கள்
வெற்றியும் தோல்வியும் திசைக்காட்டிகள்
இலக்கு ?
திசைக்காட்டிகள் முடிவு செய்யும் சிலருக்கு
மைல்கற்கள் முடிவு செய்யும் சிலருக்கு...
திசைகளும் மைல்களும் மறந்து
போகும் சாலை எதுவாயினும்
விபத்துகளின்றி போனால் போதும்
என்ற எண்ணமே பலருக்கு.... :-)
லேபிள்கள்:
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
வாழ்க்கையெனும் சாலை,
Tamil,
Thought
புதன், 8 டிசம்பர், 2010
ஞாயிறு, 21 நவம்பர், 2010
உடல் உயிர்
உடல் - உயிர் இதில் நிஜம் எது?
உடலின்றி உயிரின் பலன் என்ன?
உயிரின்றி உடலின் பொருள் என்ன்?
சில நாட்கள்..
உடல்களின் துணை மட்டும்..நிஜம்
சில நாட்கள்..
உயிர் மேல் ஆசை மட்டுமே ... நிஜம்
பல நாட்கள்..
உடல் - உயிர் மறப்போம்
வாழ்க்கையெனும் கனவில்..
லேபிள்கள்:
உடல்,
உயிர்,
கனவில் நிஜம்,
சிந்தனை,
Kanavil Nijam,
Thought
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
ஓர் தாயின் கண்ணீர்
ஓர் உடல் ஈருயிராய் இருந்தோம்..
என் கண்மணியே,
பிறந்த சில நொடியினில் "அம்மா" என்றாய்
என் கண்மணியே,
என் உலகை உன் உலகாய் மாற்றினாய்
என் கண்மணியே,
உன் சிரிப்பை என் சிரிப்பாய் மாற்றிக்கொண்டேன்
என் கண்மணியே,
ஒவ்வொரு நொடியிலும் நான் "என்னை" உணர்ந்தேனடா
என் கண்மணியே
என் முலையின் பால் இன்று இரத்தமாய் வழிகின்றதே
என் கண்மணியே
இன்று, என்னை விட்டு சென்றாயோ
என் கண்மணியே!!
ஞாயிறு, 6 டிசம்பர், 2009
பேசப்படாது!!
நிலை
சமுதாயத்தில் பெண்ணின் நிலை!!
தவம்
இத்தனை ஆண்டுகள்
உன் கண்களின் வினாக்கள் என் தூக்கம் பறித்தன
உன் கூந்தலின் விடுகதைகளில் என் வரிகள் சிக்கின..
உன் புன் முறுவலின் சந்தோஷத்தில் என் மனமும் குதித்தது..
இன்றும் உன் ஓர் சொல் வார்த்தைக்காக...தவத்தில் நான்!
பேசப்படாது
பேசப்படாது..
கேட்கக்கூடாது
சொல்லமுடியாது..
திரிக்கமுடியாது...
சத்தமில்லை..
முத்தமில்லை
உதடுகள் சேர்ந்திடாமல்..!!
ஜனநாயகம்
ஜனநாயகம்
சுதந்திரம்
எழுத்துரிமை
பேச்சுரிமை
நீதி
நேர்மை
இவை யாவும் ..
அரசியல் கட்சியில் உள்ளவருக்கு மட்டும்!!
பேசப்படாது
கலவி
கல்வி
மதம்
ஜாதி
தலித்
ஐய்யர்
முஸ்லிம்
இந்து
ராமர்
பெண்ணியம்
ஆதிமுக
திமுக
லஞ்சம்
வாக்குறுதி
மோசடி
விசாரணை கமிஷன்
தேர்தல் கமிஷன்
ஓட்டு எண்ணிக்கை
கலைஞர் குடும்பம்
தமிழ் கலாசாரம்
இலங்கை தமிழர்
தமிழர் படுகொலை
புலிகள்
ஈழம்
புத்த குருக்கள்
கிரிஸ்து
கடவுள்
கல்வி
மதம்
ஜாதி
தலித்
ஐய்யர்
முஸ்லிம்
இந்து
ராமர்
பெண்ணியம்
ஆதிமுக
திமுக
லஞ்சம்
வாக்குறுதி
மோசடி
விசாரணை கமிஷன்
தேர்தல் கமிஷன்
ஓட்டு எண்ணிக்கை
கலைஞர் குடும்பம்
தமிழ் கலாசாரம்
இலங்கை தமிழர்
தமிழர் படுகொலை
புலிகள்
ஈழம்
புத்த குருக்கள்
கிரிஸ்து
கடவுள்
பேசப்படாது!!
தமிழர் தவிக்கும் தமிழ் நாட்டில்!!
லேபிள்கள்:
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
பேசப்படாது,
Dont Talk,
Kanavil Nijam,
Tamil,
Thought
சனி, 5 டிசம்பர், 2009
இரு விரல்கள்
பிறந்த சில நாட்கள்..
உள்ளங்கையுடன் ஒன்றாயிருந்த..விரல்கள்..
காலப்போக்கில் தனியே பிரிந்தன.
தன்னை பற்றி மட்டும் சிந்தித்து வந்தன...
பின்.. ஓர் நாள் இது நிகழ்ந்தது... :-D
உள்ளங்கையுடன் ஒன்றாயிருந்த..விரல்கள்..
காலப்போக்கில் தனியே பிரிந்தன.
தன்னை பற்றி மட்டும் சிந்தித்து வந்தன...
பின்.. ஓர் நாள் இது நிகழ்ந்தது... :-D
லேபிள்கள்:
இரு விரல்கள்,
கனவில் நிஜம்,
காதல்,
சிந்தனை,
தமிழ்,
Love,
Tamil,
Thought
திங்கள், 30 நவம்பர், 2009
கடவுள் 2.0?
காடுகளில் சுற்றி அலைந்த மனிதன்...
இன்று நிலவில் தண்ணீர் கண்டுபிடிக்கும் அளவு செல்ல ஓரே காரணம்..
மாற்றம்
மனித இனத்தின் ஒவ்வொரு முக்கிய தருணத்திலும்... மனிதன் தனது இன்றைய நிலையிலிருந்து வேறு நிலை அடைய நினைக்கும் - "மாற்றமே" எந்நேரத்திலும் காரணமாக இருப்பதை நாம் உணரலாம்...
இந்த நூற்றாண்டில் மட்டும் மனித இனத்தின் வளர்ச்சி (மாற்றம்) மிகவும் பிரமிக்கவைக்கிறது...
கிட்டதட்ட எல்லா துறைகளிலும் மாற்றம் கண்ட மனிதன்...
கடவுளில் மட்டும் மாற்றம் விரும்பாமல் இருப்பது ஏன்??
இந்து கடவுள்களான .. .
பிரம்மா, விஷ்ணு,சிவன்,பிள்ளையார்,முருகன், பார்வதி, சரஸ்வதி,காளி,அம்மன் ... சில நூற்றாண்டுகளாகவே வணங்கப்பட்டு வருவதற்கான சான்றுகள் உள்ளன..
அதே போல் புனித மேரி,கிருஸ்து, நபிகள் நாயகம்,புத்தர் போன்ற கடவுகளும் /கடவுளின் பிரதிநிதிகளும் சில நூற்றாண்டுகளாகவே வணங்கப்பட்டு வருகின்றனர்.
நாம் சாமியார்கள் கடவுளாக வணங்கபடுவதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் ...
நமது மிக இளைய கடவுளுக்கு வயது - சில நூற்றாண்டுகளாக இருக்கும்..
இது மிகவும் வியப்பாக உள்ளது..
எல்லாவற்றிலும் மாற்றம் விரும்பும் மனிதன் தனது நம்பிக்கைகளில் மட்டும் மாற்றம் விரும்பாதது ஏன்??
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்:
பெரும்பாலான கடவுள்கள் எப்போதும் புராணங்களில் இருந்தே தோன்றினர்..ஏனோ இன்றைய உலகில் புராணங்கள் யாரும் எழுதுவதில்லை... எழுதினாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மிடமில்லை...இதனால் புதிய கடவுகள் கண்டுபிடிக்கப்படவில்லை...
சாமியர்களை கடவுளாக்கி.....உலகில் தோன்றும் நிஜக்கடவுள்களை.. நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்..
"கடவுள் ஒன்று" என்று உலகம் நம்புவதால்... புதிய கடவுள் படைக்க எந்த ஒரு அவசியமும் இல்லாமல் இருக்கலாம்...
கடவுள் எல்லாம் ஏமாற்று வேலை என்று நம்பும் பகுத்தறிவு கூட்டம் அதிகமானதால்... புதிய கடவுளுக்கான எந்த எதிர்ப்பார்ப்பும் மக்களிடையே இல்லாமல் இருக்கலாம்..
தினம் தினம் புதிய கடவுள்கள் கண்டுபிடிக்கப்பட்டுகின்றன... ஆனால் அவைகள்/அவர்கள் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளும் கடவுளாக மாற .. வெகு காலம் (நூற்றாண்டுகள்) பிடிக்கும்... இதனால் நம்மால் புதிய கடவுள்களின் வளர்ச்சியை எளிதில் கண்டுக்கொள்ள முடியாமல் இருக்கலாம்....
நமது கடவுகள் / நம்பிக்கைகள் மாற்றும் உரிமை நம்முடையது...
அப்படி காலத்திற்கேற்ப கடவுகளை மாற்றியமைக்கும் பொருப்பும்..நம்முடையது...
கடவுளும் மாறுவார் / மாற்றப்படுவார்...
இதுவே இயற்கையின் நியதி..
கடவுள் 2.0 (GOD Redefined)
லேபிள்கள்:
கடவுள்,
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
GOD,
Kanavil Nijam,
Tamil,
Thought
திங்கள், 24 ஆகஸ்ட், 2009
மக்கள் - நாடு - நிஜம்!
மக்கள் நிஜமா?
அல்லது
நாடு நிஜமா?
மக்கள் இன்றி நாடு இல்லை...
நாடு இன்றி மக்கள் உண்டு...
எல்லா மனித இனமும் ஒன்று என்று கூறினால்..
நாடுகள் ஏன்??
நாடுகளின் பெயரால் போர்கள் எதற்கு?
மக்கள் உயிர் குடிக்கும் நாடு தேவை தானா?
வெரும் கொடுகள் என்று நாம் நம்மை ஏமாற்றிக்கொண்டாலும்..
எல்லைகளும் , பிரிவினையுமே எப்போதும் மனிதன் வாழ்வை தீர்மானிக்கின்றன..
இதை ஏற்று கொள்ள நாம் மருப்பது ஏன்?
ஏற்றத்தாழ்வு விரும்பாத மனிதர்களாய்.. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதேன்?
நம் ஒவ்வொரு சிந்தனையிலும் ...
பிரிவினை ஒளிந்திருப்பது தான் நிஜம்!!
இதுவே மனிதனின் இயற்கை குணமா??
மனிதன் என்று சொல்லி
நாம் பிற உயிரினங்களிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
சாதி பெயர் சொல்லி..
நாம் பிற சாதியினரிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
தமிழன் என்று..
நாம் பிற இனத்தவரிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
தென்இந்தியன் என்று..
நாம் வட இந்தியரிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
இந்தியன் என்று
நாம் பிற நாட்டவரிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
இப்படி..
ஒவ்வொரு படியிலும் பிரிவினை வளர்க்க ..
நாடுகளும்.. கொடுகளும் உதவுகின்றன..
இதுவே நிஜம்!
செவ்வாய், 17 மார்ச், 2009
இரக்கமற்ற எண்கள்
மருத்துவமனை மீது குண்டுவீச்சு: 11 பேர் பலி
இதை படித்த போது நான் முன்பு எழுதிய சில வரிகள் ஞாபகம் வந்தன...
"Train crash death toll rises to 71"
Zimbabwe Death Toll Rises as Human Rights Watch Blames Army
இச்செய்திகள் "மரணத்தை" மட்டும் சொல்பவையல்ல...
எண்களுக்கு நடுவே துலைந்துப்போன மனிதர்களையும் நினைவு படுத்துபவை தான்..
ஆம் ..சில நேரங்களில் ,எண்கள் சாமானிய மனிதருக்கு இரக்கம் காட்டுவதில்லை...
பெயர்களை மறைத்து,
முகங்கள் மறைத்து,
மனிதனாகிட அவன் போராடிய நாட்களை மறைத்து,
சிறிய வெற்றிகளை மறைத்து,
சின்னச் சின்ன சந்தோஷங்களை...மறைத்து,
குடும்ப சூழ்நிலை மறைத்து,
அவனை வழியனுப்பி வைத்த பிஞ்சி விரல்களை மறைத்து,
வாழ்வின் சிறிய மகிழ்ச்சிகளை மறைத்து,
வெரும் ... கருப்பு நிற மைய்யில்..,
எண்ணிக்கையின்.. ஒரு பகுதியாக்குவது,
எந்த விதத்தில்... நியாயமாகும்...
"உலகம் போரப்போக்கில்.. இது எல்லாம் சகஜமப்பா... எவனுக்கும் கவலயில்லை" என்று பலரும் சொல்லும் போது...
"சரி .. இந்த .. எண்ணிக்கையில்...உங்கள் நெருங்கிய உறவினர் அடக்கம் என்றால்..என்ன செய்வீர்கள்... " என்று கேட்டால்....
"என்ன பண்ண முடியும்... படிச்சிட்டு.. ரெண்டு துளி கண்ணீர் சிந்திட்டு....அடுத்த காரியத்தப் பார்க்க வேண்டியது தான்.." என்று பதில்...வருகிறது....
இதை படித்த போது நான் முன்பு எழுதிய சில வரிகள் ஞாபகம் வந்தன...
"Train crash death toll rises to 71"
Zimbabwe Death Toll Rises as Human Rights Watch Blames Army
இச்செய்திகள் "மரணத்தை" மட்டும் சொல்பவையல்ல...
எண்களுக்கு நடுவே துலைந்துப்போன மனிதர்களையும் நினைவு படுத்துபவை தான்..
ஆம் ..சில நேரங்களில் ,எண்கள் சாமானிய மனிதருக்கு இரக்கம் காட்டுவதில்லை...
பெயர்களை மறைத்து,
முகங்கள் மறைத்து,
மனிதனாகிட அவன் போராடிய நாட்களை மறைத்து,
சிறிய வெற்றிகளை மறைத்து,
சின்னச் சின்ன சந்தோஷங்களை...மறைத்து,
குடும்ப சூழ்நிலை மறைத்து,
அவனை வழியனுப்பி வைத்த பிஞ்சி விரல்களை மறைத்து,
வாழ்வின் சிறிய மகிழ்ச்சிகளை மறைத்து,
வெரும் ... கருப்பு நிற மைய்யில்..,
எண்ணிக்கையின்.. ஒரு பகுதியாக்குவது,
எந்த விதத்தில்... நியாயமாகும்...
"உலகம் போரப்போக்கில்.. இது எல்லாம் சகஜமப்பா... எவனுக்கும் கவலயில்லை" என்று பலரும் சொல்லும் போது...
"சரி .. இந்த .. எண்ணிக்கையில்...உங்கள் நெருங்கிய உறவினர் அடக்கம் என்றால்..என்ன செய்வீர்கள்... " என்று கேட்டால்....
"என்ன பண்ண முடியும்... படிச்சிட்டு.. ரெண்டு துளி கண்ணீர் சிந்திட்டு....அடுத்த காரியத்தப் பார்க்க வேண்டியது தான்.." என்று பதில்...வருகிறது....
லேபிள்கள்:
இரக்கமற்ற எண்கள்,
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
Cruel Numbers,
Kanavil Nijam,
Tamil,
Thought
மீண்டும் தொடக்கம்
"நான் அவனில்லை" எனும் பதிவை தெரியாமல் ப்ளாகரிலிருந்து அழித்துவிட்டேன்...
நாலு வருடங்கள் பல மணி நேரங்கள் செலவழித்து குருவி சேர்ப்பதுப்போல்... பதிவுகள் சேர்த்து... சில விநாடிகளில் துலைத்து நிற்கிறேன்...
நாம் படைத்த ஒன்றின் மறைவில் தான் எத்தனை வருத்தம்...
சரி.. நடந்தது எல்லாம் நல்லதுக்கே என்று கருதி....
மீண்டும் ஒரு வலைப்பதிவை தொடங்கியிருக்கிறேன்..
மீண்டும் புதிதாய் ஒரு முயற்சி...
எத்தனை நாட்கள் என்னால் தாக்கு பிடிக்க முடிகிறது என்பதை பார்ப்போம்..
கனவில் நிஜம்...
நாலு வருடங்கள் பல மணி நேரங்கள் செலவழித்து குருவி சேர்ப்பதுப்போல்... பதிவுகள் சேர்த்து... சில விநாடிகளில் துலைத்து நிற்கிறேன்...
நாம் படைத்த ஒன்றின் மறைவில் தான் எத்தனை வருத்தம்...
சரி.. நடந்தது எல்லாம் நல்லதுக்கே என்று கருதி....
மீண்டும் ஒரு வலைப்பதிவை தொடங்கியிருக்கிறேன்..
மீண்டும் புதிதாய் ஒரு முயற்சி...
எத்தனை நாட்கள் என்னால் தாக்கு பிடிக்க முடிகிறது என்பதை பார்ப்போம்..
கனவில் நிஜம்...
லேபிள்கள்:
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
Kanavil Nijam,
Tamil,
Thought
திங்கள், 16 மார்ச், 2009
கனவில் நிஜம்!
நாம் காணும் கனவில்..
நிஜம், நாம் காணும் கனவு மட்டுமே!!
நாம் வாழும் வாழ்க்கையில்...
நிஜம், "வாழ்க்கை" மட்டுமே!!
நாம் தொலைந்த பின்பு,
கனவுகளும்...வாழ்க்கையும்
தொலைந்து போவதுண்டா??
நிஜம், நாம் காணும் கனவு மட்டுமே!!
நாம் வாழும் வாழ்க்கையில்...
நிஜம், "வாழ்க்கை" மட்டுமே!!
நாம் தொலைந்த பின்பு,
கனவுகளும்...வாழ்க்கையும்
தொலைந்து போவதுண்டா??
லேபிள்கள்:
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
Kanavil Nijam,
Tamil,
Thought
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





