News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 டிசம்பர், 2010

மீண்டும் வெங்காயம்

வெங்காய விலை பற்றி பெரியாரிடம் தான் கேட்க வேண்டும்: கருணாநிதி

வெங்காயத்தின் ஏற்றத்தால்... மட்டுமே
பெரியாரை நினைவுகோரும் கருணாநிதி...

:-D

இது ...பிரென்ச் புரட்சிக்கு முன் ராணி மேரி..
"பிரெட் இல்லையென்றால் கேக் சாப்பிடட்டும்" .. என்றது போல் உள்ளது..

ஆனால்

இலவச டி.வி , அரிசி , ஓயின் ஷாப் மற்றும் ஓட்டு போட பணம் இருக்கும் வரை ...
தமிழகமும் / தமிழர்களும் புரட்சி புஸ்வானங்கள் தான் :-)
  

செவ்வாய், 22 டிசம்பர், 2009

ரஷ்யாவில் - யு.ஃப்.ஓ


ஞாயிறு, 22 நவம்பர், 2009

கால்பந்தும் உலக அரசியலும்

சில நாட்களுக்கு முன் நடந்த உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றில் பிரான்ஸும் ஐயர்லாந்தும் மோதின,
இப்போட்டியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருக்க, ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் பிரான்ஸ் அணியின் தலைவர் தியேரி ஆண்றி தன் கைகளை பயன்படுத்தி பந்தை நிறுத்தி, பின் பிரானஸ் இரண்டாம் கோல் அடிக்க உதவி செய்தார்...

கால் பந்தில் , பந்தை கைகளால் தடுப்பது தவறு என்று அறிந்திருந்தும்.. பின் அதை நடுவரிடம் சொல்லாமல் மறைத்ததும்.. அவரின் மேல் பெரும் குற்றச்சாட்டை ஏற்படுத்தியுள்ளது...

அவர் தன் கைகளால் பந்தை நிறுத்தியதை கீழுள்ள வீடியோவில் காணலாம்..


இதை குறித்து தியேரி ஆண்றி அளித்த பதிலையும் நீங்கள் காணலாம்..


இது போன்று நடப்பது இதுவே முதல் முறையும் அல்ல..
1986ல் டியகோ மாரடோனா இங்கலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இது போன்ற ஒரு கோல் அடித்தது உலக அறிந்த உண்மையே...


ஆனால் இந்த முறை தொலைக்காட்சியின் வளர்ச்சியும் , இணையத்தின் வளர்ச்சியும் தியேரி ஆண்றியின் இந்த ஏமாற்றுத்தனத்தை மிகவும் சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கின்றன...

ஐயர்லாந்து பிரதமர் கூட இந்த போட்டியை மீண்டும் நடத்தக்கோரி கோரிக்கை வைத்துள்ளார்..

இது கால்பந்திற்கும் உலக அரசியலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துகிறது..

1969ல் எல் சால்வேடர் ஹோண்டுரஸ் இடையே நடந்த கால்பந்து போட்டிகள், அவ்விருநாடுகளுக்குமிடையே போர் ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

இதனை "கால்பந்து போர்" (Soccer War) என்றனர்..

இதே போன்று 1990ல் குரேட்சிய - செர்பிய அண்களுக்கான கால்பந்தாட்டமே அவ்விரு பிரிவினருக்கும் இடையேயான பகைமை எனும் திரியை பற்ற வைத்ததாக கால்பந்து ஆர்வலர்கள் நம்புகின்றனர்...

மக்கள் பொழுதுப்போக்காக கருதிய ஒரு விளையாட்டு, எப்படி அந்த மக்களின் வாழ்க்கையை மாற்றியது என்று ஆழ்ந்து நோக்கினால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..

வியாழன், 19 நவம்பர், 2009

ஏழே நிமிடங்களில் பத்து வருட உலக வரலாறு!!

ஆம்...ஏழே நிமிடங்களில் பத்து வருட உலக வரலாறு!!



வியாழன், 5 நவம்பர், 2009

ஃபராரி உலகம் - அபுதாபி

"ஃபராரி உலகம்" மற்றும் ஒரு கேளிக்கை பூங்கா..
இது மற்ற எந்த ஒரு வளரும் நாட்டிலும் செய்ய முடியுமா என்பது சந்தேகமே!!


செவ்வாய், 17 மார்ச், 2009

அஸ்தமிக்கும் உதயம்

இன்று...மாலை இலங்கை செய்திகளைவிட..என்னை பெரிதும் பாதித்தது...

Curtain falls in Udhayam complex

"நான் ஒரு சினிமா பைத்தியம்" ... :-)இதை மனதில் வைத்துக்கொண்டு கீழ்வருபவற்றை படிக்கவும்..

25 வருடங்களாக ... கலைஞர்.கருணாநிதி நகரில் வசித்து... வந்துள்ளேன்...கடந்த சில ஆண்டுகளில் தான் - தமிழகத்தின் வெளியே சுற்றிவருகிறேன்..ஆனால் எப்போது சென்னை சென்றாலும் "உதயம்" மறக்காமல்... செல்வதுண்டு..

எனது பள்ளி படிப்பு முதல்..இன்றய நாள் வரை .. எனது பல நினைவுகள் "உதயம்" சம்மந்தப்பட்டவை...

வெள்ளி , சனி இரவுகளை வீட்டில் செலவளித்ததைவிட ..உதயத்தில்.. செலவளித்தது.. தான்.. அதிகம்..

கையில் பணம் இல்லாத சமயம் 10 ரூபாய் அனுமதிச்சீட்டில் முதல் வரிசையில் பார்த்த படங்களும் உண்டு....

அனுமதிச்சீட்டு கிடைக்காமல்... அதிக விலை கொடுத்து.. ப்ளாகில் வாங்கி பார்த்தப்படங்களும் உண்டு..

நான்கு திரையரங்களில் ஓடும் படங்களையும் பார்த்து முடித்து.. பின் வேரு வழியின்றி.. பார்த்த படத்தையே மீண்டும் பார்த்ததும்... உண்டு..

Engineering Counselling..முடித்து கல்லூரி கிடைத்த சந்தோஷத்தில்..அப்பா அம்மாவுடன்.. "சுந்தர புருஷன்" போனது.. இன்றும் நினைவில் உள்ளது..

"தளபதி"... முதல் நாள் - பார்த்த அனுபவம்.. மறக்க முடியாதது... "தளபதி" அனுமதிச்சீட்டையே... உற்றுப்பார்த்து..பரவசமடைந்ததும்.. நினைவிலுண்டு..

பசுபதிக்காக..... முதல் நாள் .. "மச்சி" படம் பார்த்த 20 நபர்களில் நானும் ஒருவன்...திரையரங்கில்.. இரு வரிசைகள் மட்டும்.. ஆட்கள்.. :-)

"ராம்" படத்தில்.. படத்தின் Producer , Director இருக்கைகளின் பின் அமர்ந்து..ஒவ்வொரு காட்சிக்கும்.. நக்கல் பண்ணியது.. காமெடி..

"கண்ணீர் பூக்கள்" என்ற.. சோகப்படத்தை... திரையரங்கிலேயே.. கத்தல்கள் மூலம்..காமெடி படமாக்கியதும்..நினைவில் உண்டு...

பிறந்த நாட்களையும்.. கொண்டாடியதுண்டு..

காதல் பிறப்பையும் கொண்டாடியதுண்டு..

காதல் முரிவையும்.. பொக்கியதுண்டு..

வாழ்க்கையின் வெருமையை நிரப்பியதுண்டு..

உதயத்தில்..படங்கள் பார்த்து...

இந்தியா.. வரும் பொழுது..

வீட்டை நெருங்கும் பொழுது..

பாரமேரும் என் மனது...

"உதயம்" நினைவுகளினால்.