கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 அக்டோபர், 2011

இரவில்லா நாட்கள்

கனவு ஏது
உறக்கம் ஏது..
ஓய்வு ஏது...

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

ஓட்டம் உண்டு
ஏக்கம் உண்டு..
கோபம் உண்டு...

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

தான் மட்டும்..
பணம் மட்டும்
பொய் மட்டும்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

வலி கொஞ்சம்..
பழி கொஞ்சம்
பாவம் கொஞ்சம்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

நிலவு வேண்டும்..
குளிர்க்காற்று வேண்டும்
இருளும் வேண்டும்..

இரவில்லா நாட்களான ... வாழ்விலே..

சனி, 22 ஜனவரி, 2011

அன்பு நண்பனுக்கு

தோல்விகள் மலையென குவிந்த பின்பு,
சொந்தங்கள் சோகங்களான பின்பு,
முயற்சிகள் முற்றும் துறந்த பின்பு,
உலகத்திற்கும் தனக்கும் விவாகரத்தான பின்பு,
சுவாசிப்பது பெரும் பணியான பின்பு,
வாழ்வின் அர்த்தம் அபத்தமான பின்பு,
எதற்கு வாழ்க்கை என்றான பின்பு,

என் அன்பு நண்பனுக்கு,
நான் சொல்ல நினைப்பது...

ஒரு முறை
வெற்றிகளின் மலையை அடைந்திட .. ,

சொந்தங்களை சந்தோஷங்களாக்கிட.. , 
முயற்சிகள் புன்னகையில் முடிந்திட.. ,
உலகத்தை தன்னுள் உணர்ந்திட..,
சுவாசிப்பதை செயலில் மறந்திட, 
வாழ்வின் பொருள் "நீ" என்றுணர்ந்திட,

இன்று நீ புதிதாய் பிறந்தாய் என எண்ணிக்கொள் , 
இந்த நண்பன் ..தோள் கொடுத்திட,. வாழ்வின் கை பற்றிக்கொள்!!

வெள்ளி, 1 ஜனவரி, 2010

புத்தாண்டு

புத்தாண்டு குறித்து நான் வெகு நாட்களுக்கு முன் எழுதியது

புத்தாண்டு 
வாழ வழி கிடைத்திட,
வாழ்க்கைத்தனை வென்றிட,
வாட்டத்தை போக்கிட,
ஓட்டத்தை துவங்கிட,
மோதல் குறைந்திட,
காதல் இனித்திட,
தடைகள் உடைத்திட,
கனவு நிஜமாக்கிட,

இன்று முதல்...365 புதிய நாட்கள்...
உனக்காக!!!

புத்தாண்டு


புத்தாண்டு
நாட்காட்டியின் கடைசி பக்கத்தின்
மறைவில் - புத்தாண்டு!!

புத்தாண்டு
வருடங்களுக்கிடையே..
பறந்து செல்லும் நாட்கள்
கனவு கண்டு தனி உலகம் படைத்திட..

புத்தாண்டு - ஒரு புதிய தனி உலகம்...
என்னுள்.!!


புத்தாண்டு
தினம் கழியும்
நாட்களை எண்ணி பார்க்காமல்..
கழிந்த வருடங்களை
மட்டும் எண்ணி பார்க்கும் மனிதர்கள் நாம்..
ஒவ்வொறு தினத்தையும்,
புது வருடமாக எண்ணி பார்..
அப்பொழுது புரியும்,
நாட்களின் அருமை
வாழ்க்கையின் உண்மை!!

சனி, 31 அக்டோபர், 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

என் கனவின் நிஜம் நீ,
என் சிரிப்பின் ஓசை நீ,
என் தன்னம்பிக்கையின் வெற்றி நீ,
என் வாழ்வின் பொருள் நீ,

நீ புதிதாய் பிறந்த இன்று..
நானும் புதிதாய் பிறந்தேனடி..

--------------------------------

வருடா வருடம்...
முதல் முதல் மழைத்துளி போல்..
நீ பிறந்த நாள்!!

--------------------------------

வாழ கற்றுக்கொடுத்தாய்
நான் தேடிய இன்னொரு ..தாய் நீயடி!!

--------------------------------

வார்த்தைகள் மட்டுமே என்னிடம்
வாழ்க்கை மொத்தம் உன்னிடம்..
இன்று
என்னையும்.. உன்னுடன் சேர்த்துக்கொள்!


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வியாழன், 29 அக்டோபர், 2009

கோபம்



கண்கள் சிவந்திட,
நரம்பு புடைத்திட,
மெளனம் சிதரிட..
வார்த்தைகளின் மழை
கோபம்



கோபம் -
எண்ணம்,
கனவு,
சிந்தனை,
பழிவாங்கிட மட்டுமே!!

திங்கள், 26 அக்டோபர், 2009

உடல்!



அம்மா,
அப்பா,
தாதா,
பாட்டி,
அண்ணன்,
அக்கா,
தம்பி,
தங்கை,
உறவினன்,
நான்!

வெறும் உடல்,
சுவாசிக்க மறந்த பின்!

---------------



பழகிய நபர்களை,
தொட்டுத் தழுவிய தோல்களை,
வெரும் உடல்களாக்கும் நாட்கள்
மனித வாழ்வின், கசப்பு நாட்கள்!

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

வாழ்க்கை

நினைவுகள்..

கனவுகள்..

நடுவே...

நிஜங்கள் - வாழ்க்கை!


செவ்வாய், 8 செப்டம்பர், 2009

கனவு முடியும் இடம்

வாழ்வெனும் கனவிலிருந்து எழுந்தவர்களில்...
நான்..
வாழ்வின் கனவு காண மறுத்தவர்களில்...
நான்..
வாழ்வில் கனவை தொலைத்த பலரில்..
நான்...

கனவு .. நான்....நிஜம்??

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

புயல்

என்..புயல் வாழ்க்கையில்...
காற்றில்..மிதந்த ..பூ
அவள்..

புயலை மறந்தேன்...!!
பூவை பார்த்த நொடி!!




செவ்வாய், 17 மார்ச், 2009

மிகச் சிறிய கவிதைகள்

மிகச் சிறிய கவிதைகள்

அம்மா!

-----------------

காதல்

-----------------

இதயம்

-----------------

அவள்!!

-----------------

புன்சிரிப்பு

-----------------

கூந்தல்

-----------------

விழிகள்

-----------------

சுண்டுவிரல்

-----------------

நாய்குட்டி

-----------------

பூ

-----------------

மொஸார்ட்

-----------------

பஞ்சுமிட்டாய்

-----------------

கடற்க்காற்று...

-----------------

கடலை..:-)

-----------------

வெண்ணிலவு

-----------------

மழை

-----------------

கண்ணீர்....

-----------------

"?" வாழ்க்கை

------------------

பாரதி

------------------

சுதந்திரம்

------------------

தாய்மண்

------------------

தமிழ்


நான் கடவுள்

கடவுள் மனிதன் படைத்தான்?

மனிதன் கடவுள் படைத்தான்?

----------------

"நான்" கடவுள்..எனும் மனிதன்"

நான்" மனிதன்.. எனும் கடவுள்:-)

----------------

கடவுளின் பிறப்பிடம்

முதலில் தேடிய மனித மனம்..

----------------

கடவுள் படைத்தான்..

"நான்" என்றான் மனிதன்

கடவுள் மறைந்தான்..

---------------

"நான்"

மனமா?

உடலா?

கற்பனையா?

--------------

"நான்" - மாயை

"நீ" - மாயை...

நீ இன்றி நான் இல்லை - நிஜம்..

--------------

இறைவா..உனை நோக்கி நான்..

"நான்" தொலைந்த பின்..

--------------

கடவுளின் வருத்தம்

தன்னை இன்றும் புரிந்துக்கொள்ளாத

மனிதனை எண்ணி..

மனிதனின் வருத்தம்

தன்னை இன்றும் புரிந்துக்கொள்ளாத

கடவுளை எண்ணி..

---------------

புத்தகங்களில். மட்டுமே..கடவுள்

கோவில்களில். மட்டுமே..கடவுள்

புகைப்படங்களில். மட்டுமே..கடவுள்

சிலைகளில். மட்டுமே..கடவுள்

சுருக்கமாக சிறை எடுத்தான் "இல்லாத" கடவுளை ...

---------------

"நான்" , "கடவுள்" பொருளற்றவை..

"நான் கடவுள்"பொருளென்ன?