ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பொங்கல்??




ஒவ்வொரு நொடியும்.
கரும்பைப் போல் இனித்திட
கதிரவன் போல் ஒளிர்ந்திட
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..


இந்நாள்..

தினம் முன் விழித்து நம்மை எழுப்பும்
கதிரவனை முதுகில் தட்டிக்கொடுக்கும் நாள்

"தானே" கடந்து, தன் கடன் மறந்து, ஒரு நாள்
தன் கண்ணீர் மறக்க நினைக்கும் உழவர் திருநாள்

உண்ணும் உணவின் கதை விதைத்து
காணாமல் போகும் இவர்களை தேடும் நாள்

"உலக தொலைக்காட்சியில் முதன்முறை"யாக
பல வரலாற்றுகளை உருவாக்கும் நாள்..


சினிமா நடிகர்களும்,சாலமன் பாப்பையாவும்,  
மட்டும் நம் உறவுகளான நாள்


நகர தீப்பெட்டி வீடுகளில் இன்டெக்ஷன் அடுப்பகளில்
குக்கர் திருநாள்

தமிழ் புத்தாண்டின் முதல் நாளா? இல்லையா?
என்ற குழப்பத்தை அரசியலாக்கும் நாள்

தமிழக அரசை வாழவைக்கும் டாஸ்மாக் கடைகளில்
குடிக்காரத் தமிழனின் தன்மான திருநாள்

இவை எதையும் யோசிக்காத , யோசிக்க நேரமில்லாத
இயந்திர வாழ்க்கையில் காரணம் மறந்து,
விடுமுறையாக மட்டும் பதிவான மற்றுமொரு நாள்!!

1 கருத்து: