ஞாயிறு, 20 டிசம்பர், 2009

ஓர் தாயின் கண்ணீர்




ஓர் உடல் ஈருயிராய் இருந்தோம்..
என் கண்மணியே,

பிறந்த சில நொடியினில் "அம்மா" என்றாய்
என் கண்மணியே,

என் உலகை உன் உலகாய் மாற்றினாய்
என் கண்மணியே,

உன் சிரிப்பை என் சிரிப்பாய் மாற்றிக்கொண்டேன்
என் கண்மணியே,

ஒவ்வொரு நொடியிலும் நான் "என்னை" உணர்ந்தேனடா
என் கண்மணியே,

இந்த அம்மா முகம் பார்த்து.. "அம்மா" என்பாயோ,
என் கண்மணியே

என் முலையின் பால் இன்று இரத்தமாய் வழிகின்றதே
என் கண்மணியே

இன்று, என்னை விட்டு சென்றாயோ
என் கண்மணியே!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக