வியாழன், 26 மார்ச், 2009
முட்டை உடைக்க சிறந்த வழி!!
:-D
செவ்வாய், 24 மார்ச், 2009
டபுள் டச் ஹாலிடே க்ளாசிக்
புதன், 18 மார்ச், 2009
இந்திய சூப்பர்மேன்
குறிப்பாக சொல்ல வேண்டுமானால்...."தெலுங்கு" சூப்பர்மேன்.. :-D
செவ்வாய், 17 மார்ச், 2009
மிகச் சிறிய கவிதைகள்
மிகச் சிறிய கவிதைகள்
அம்மா!
-----------------
காதல்
-----------------
இதயம்
-----------------
அவள்!!
-----------------
புன்சிரிப்பு
-----------------
கூந்தல்
-----------------
விழிகள்
-----------------
சுண்டுவிரல்
-----------------
நாய்குட்டி
-----------------
பூ
-----------------
மொஸார்ட்
-----------------
பஞ்சுமிட்டாய்
-----------------
கடற்க்காற்று...
-----------------
கடலை..:-)
-----------------
வெண்ணிலவு
-----------------
மழை
-----------------
கண்ணீர்....
-----------------
"?" வாழ்க்கை
------------------
பாரதி
------------------
சுதந்திரம்
------------------
தாய்மண்
------------------
தமிழ்
நான் கடவுள்
கடவுள் மனிதன் படைத்தான்?
மனிதன் கடவுள் படைத்தான்?
----------------
"நான்" கடவுள்..எனும் மனிதன்"
நான்" மனிதன்.. எனும் கடவுள்:-)
----------------
கடவுளின் பிறப்பிடம்
முதலில் தேடிய மனித மனம்..
----------------
கடவுள் படைத்தான்..
"நான்" என்றான் மனிதன்
கடவுள் மறைந்தான்..
---------------
"நான்"
மனமா?
உடலா?
கற்பனையா?
--------------
"நான்" - மாயை
"நீ" - மாயை...
நீ இன்றி நான் இல்லை - நிஜம்..
--------------
இறைவா..உனை நோக்கி நான்..
"நான்" தொலைந்த பின்..
--------------
கடவுளின் வருத்தம்
தன்னை இன்றும் புரிந்துக்கொள்ளாத
மனிதனை எண்ணி..
மனிதனின் வருத்தம்
தன்னை இன்றும் புரிந்துக்கொள்ளாத
கடவுளை எண்ணி..
---------------
புத்தகங்களில். மட்டுமே..கடவுள்
கோவில்களில். மட்டுமே..கடவுள்
புகைப்படங்களில். மட்டுமே..கடவுள்
சிலைகளில். மட்டுமே..கடவுள்
சுருக்கமாக சிறை எடுத்தான் "இல்லாத" கடவுளை ...
---------------
"நான்" , "கடவுள்" பொருளற்றவை..
"நான் கடவுள்"பொருளென்ன?
இரக்கமற்ற எண்கள்
இதை படித்த போது நான் முன்பு எழுதிய சில வரிகள் ஞாபகம் வந்தன...
"Train crash death toll rises to 71"
Zimbabwe Death Toll Rises as Human Rights Watch Blames Army
இச்செய்திகள் "மரணத்தை" மட்டும் சொல்பவையல்ல...
எண்களுக்கு நடுவே துலைந்துப்போன மனிதர்களையும் நினைவு படுத்துபவை தான்..
ஆம் ..சில நேரங்களில் ,எண்கள் சாமானிய மனிதருக்கு இரக்கம் காட்டுவதில்லை...
பெயர்களை மறைத்து,
முகங்கள் மறைத்து,
மனிதனாகிட அவன் போராடிய நாட்களை மறைத்து,
சிறிய வெற்றிகளை மறைத்து,
சின்னச் சின்ன சந்தோஷங்களை...மறைத்து,
குடும்ப சூழ்நிலை மறைத்து,
அவனை வழியனுப்பி வைத்த பிஞ்சி விரல்களை மறைத்து,
வாழ்வின் சிறிய மகிழ்ச்சிகளை மறைத்து,
வெரும் ... கருப்பு நிற மைய்யில்..,
எண்ணிக்கையின்.. ஒரு பகுதியாக்குவது,
எந்த விதத்தில்... நியாயமாகும்...
"உலகம் போரப்போக்கில்.. இது எல்லாம் சகஜமப்பா... எவனுக்கும் கவலயில்லை" என்று பலரும் சொல்லும் போது...
"சரி .. இந்த .. எண்ணிக்கையில்...உங்கள் நெருங்கிய உறவினர் அடக்கம் என்றால்..என்ன செய்வீர்கள்... " என்று கேட்டால்....
"என்ன பண்ண முடியும்... படிச்சிட்டு.. ரெண்டு துளி கண்ணீர் சிந்திட்டு....அடுத்த காரியத்தப் பார்க்க வேண்டியது தான்.." என்று பதில்...வருகிறது....
அஸ்தமிக்கும் உதயம்
இன்று...மாலை இலங்கை செய்திகளைவிட..என்னை பெரிதும் பாதித்தது...
Curtain falls in Udhayam complex
"நான் ஒரு சினிமா பைத்தியம்" ... :-)இதை மனதில் வைத்துக்கொண்டு கீழ்வருபவற்றை படிக்கவும்..
25 வருடங்களாக ... கலைஞர்.கருணாநிதி நகரில் வசித்து... வந்துள்ளேன்...கடந்த சில ஆண்டுகளில் தான் - தமிழகத்தின் வெளியே சுற்றிவருகிறேன்..ஆனால் எப்போது சென்னை சென்றாலும் "உதயம்" மறக்காமல்... செல்வதுண்டு..
எனது பள்ளி படிப்பு முதல்..இன்றய நாள் வரை .. எனது பல நினைவுகள் "உதயம்" சம்மந்தப்பட்டவை...
வெள்ளி , சனி இரவுகளை வீட்டில் செலவளித்ததைவிட ..உதயத்தில்.. செலவளித்தது.. தான்.. அதிகம்..
கையில் பணம் இல்லாத சமயம் 10 ரூபாய் அனுமதிச்சீட்டில் முதல் வரிசையில் பார்த்த படங்களும் உண்டு....
அனுமதிச்சீட்டு கிடைக்காமல்... அதிக விலை கொடுத்து.. ப்ளாகில் வாங்கி பார்த்தப்படங்களும் உண்டு..
நான்கு திரையரங்களில் ஓடும் படங்களையும் பார்த்து முடித்து.. பின் வேரு வழியின்றி.. பார்த்த படத்தையே மீண்டும் பார்த்ததும்... உண்டு..
Engineering Counselling..முடித்து கல்லூரி கிடைத்த சந்தோஷத்தில்..அப்பா அம்மாவுடன்.. "சுந்தர புருஷன்" போனது.. இன்றும் நினைவில் உள்ளது..
"தளபதி"... முதல் நாள் - பார்த்த அனுபவம்.. மறக்க முடியாதது... "தளபதி" அனுமதிச்சீட்டையே... உற்றுப்பார்த்து..பரவசமடைந்ததும்.. நினைவிலுண்டு..
பசுபதிக்காக..... முதல் நாள் .. "மச்சி" படம் பார்த்த 20 நபர்களில் நானும் ஒருவன்...திரையரங்கில்.. இரு வரிசைகள் மட்டும்.. ஆட்கள்.. :-)
"ராம்" படத்தில்.. படத்தின் Producer , Director இருக்கைகளின் பின் அமர்ந்து..ஒவ்வொரு காட்சிக்கும்.. நக்கல் பண்ணியது.. காமெடி..
"கண்ணீர் பூக்கள்" என்ற.. சோகப்படத்தை... திரையரங்கிலேயே.. கத்தல்கள் மூலம்..காமெடி படமாக்கியதும்..நினைவில் உண்டு...
பிறந்த நாட்களையும்.. கொண்டாடியதுண்டு..
காதல் பிறப்பையும் கொண்டாடியதுண்டு..
காதல் முரிவையும்.. பொக்கியதுண்டு..
வாழ்க்கையின் வெருமையை நிரப்பியதுண்டு..
உதயத்தில்..படங்கள் பார்த்து...
இந்தியா.. வரும் பொழுது..
வீட்டை நெருங்கும் பொழுது..
பாரமேரும் என் மனது...
"உதயம்" நினைவுகளினால்.
