செவ்வாய், 17 மார்ச், 2009

நான் கடவுள்

கடவுள் மனிதன் படைத்தான்?

மனிதன் கடவுள் படைத்தான்?

----------------

"நான்" கடவுள்..எனும் மனிதன்"

நான்" மனிதன்.. எனும் கடவுள்:-)

----------------

கடவுளின் பிறப்பிடம்

முதலில் தேடிய மனித மனம்..

----------------

கடவுள் படைத்தான்..

"நான்" என்றான் மனிதன்

கடவுள் மறைந்தான்..

---------------

"நான்"

மனமா?

உடலா?

கற்பனையா?

--------------

"நான்" - மாயை

"நீ" - மாயை...

நீ இன்றி நான் இல்லை - நிஜம்..

--------------

இறைவா..உனை நோக்கி நான்..

"நான்" தொலைந்த பின்..

--------------

கடவுளின் வருத்தம்

தன்னை இன்றும் புரிந்துக்கொள்ளாத

மனிதனை எண்ணி..

மனிதனின் வருத்தம்

தன்னை இன்றும் புரிந்துக்கொள்ளாத

கடவுளை எண்ணி..

---------------

புத்தகங்களில். மட்டுமே..கடவுள்

கோவில்களில். மட்டுமே..கடவுள்

புகைப்படங்களில். மட்டுமே..கடவுள்

சிலைகளில். மட்டுமே..கடவுள்

சுருக்கமாக சிறை எடுத்தான் "இல்லாத" கடவுளை ...

---------------

"நான்" , "கடவுள்" பொருளற்றவை..

"நான் கடவுள்"பொருளென்ன?


0 கருத்துகள்:

கருத்துரையிடுக