ஞாயிறு, 22 நவம்பர், 2009

கால்பந்தும் உலக அரசியலும்

சில நாட்களுக்கு முன் நடந்த உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றில் பிரான்ஸும் ஐயர்லாந்தும் மோதின,
இப்போட்டியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருக்க, ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் பிரான்ஸ் அணியின் தலைவர் தியேரி ஆண்றி தன் கைகளை பயன்படுத்தி பந்தை நிறுத்தி, பின் பிரானஸ் இரண்டாம் கோல் அடிக்க உதவி செய்தார்...

கால் பந்தில் , பந்தை கைகளால் தடுப்பது தவறு என்று அறிந்திருந்தும்.. பின் அதை நடுவரிடம் சொல்லாமல் மறைத்ததும்.. அவரின் மேல் பெரும் குற்றச்சாட்டை ஏற்படுத்தியுள்ளது...

அவர் தன் கைகளால் பந்தை நிறுத்தியதை கீழுள்ள வீடியோவில் காணலாம்..


இதை குறித்து தியேரி ஆண்றி அளித்த பதிலையும் நீங்கள் காணலாம்..


இது போன்று நடப்பது இதுவே முதல் முறையும் அல்ல..
1986ல் டியகோ மாரடோனா இங்கலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இது போன்ற ஒரு கோல் அடித்தது உலக அறிந்த உண்மையே...


ஆனால் இந்த முறை தொலைக்காட்சியின் வளர்ச்சியும் , இணையத்தின் வளர்ச்சியும் தியேரி ஆண்றியின் இந்த ஏமாற்றுத்தனத்தை மிகவும் சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கின்றன...

ஐயர்லாந்து பிரதமர் கூட இந்த போட்டியை மீண்டும் நடத்தக்கோரி கோரிக்கை வைத்துள்ளார்..

இது கால்பந்திற்கும் உலக அரசியலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை வெளிப்படுத்துகிறது..

1969ல் எல் சால்வேடர் ஹோண்டுரஸ் இடையே நடந்த கால்பந்து போட்டிகள், அவ்விருநாடுகளுக்குமிடையே போர் ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

இதனை "கால்பந்து போர்" (Soccer War) என்றனர்..

இதே போன்று 1990ல் குரேட்சிய - செர்பிய அண்களுக்கான கால்பந்தாட்டமே அவ்விரு பிரிவினருக்கும் இடையேயான பகைமை எனும் திரியை பற்ற வைத்ததாக கால்பந்து ஆர்வலர்கள் நம்புகின்றனர்...

மக்கள் பொழுதுப்போக்காக கருதிய ஒரு விளையாட்டு, எப்படி அந்த மக்களின் வாழ்க்கையை மாற்றியது என்று ஆழ்ந்து நோக்கினால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக