திங்கள், 16 நவம்பர், 2009

மறுகுடியமர்த்தலி்ல உலக சாதனை!!

மறுகுடியமர்த்தலி்ல உலக சாதனை - சொல்கிறார் இலங்கை அமைச்சர்


தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் ஆரம்பித்து... 
இலங்கை அமைச்சர்கள் வரை , எல்லோருக்கும், காமடி ஆகிவிட்டது.. 
எமது மக்களின் வாழ்க்கை!!


இவர்கள் உலக சாதனை படைக்க என் மக்கள் என்ன காய்களா?


தங்கள் வாழ்க்கையின் கால் பகுதி, பதுங்கி பதுங்கி பங்கர்களில் வாழ்ந்திருந்தால் .. 
இவர்களுக்கு புரிந்திருக்கும்..வாழ்வின் மகத்துவம்..


மனிதர்கள் யாவரும் ஒன்று என்றால்...
இன்று எம் மக்கள் மட்டும் மாக்கள் போல் ஏன் அடைக்கபட வேண்டும்.
நீயும் உன் குடும்பமும் சேர்ந்து வாழ்ந்திட நினைக்கும் போது..
என் மக்கள் நினைத்தால்.. அது எப்படி தவறாகும்..


வாழ்க்கை என்பது அலைகள் போல்..
இன்று நீ மேலே...
எம்மைப் பற்றி. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்..
நாளை எங்களுக்கும் நேரம் வரும்..
ஆனால் நாங்கள் உன்னை போல் செயல்பட மாட்டோம்..
பிரிவின் வலி உணர்ந்தவர்கள் நாங்கள்...
உன்னை விட சிறந்த மனிதர்கள் நாங்கள் ..
என்று நீயும் உன் மக்களும் புரிந்து கொள்வீர்கள்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக