திங்கள், 14 டிசம்பர், 2009

மாநிலம் Vs. நாடு

நடந்து வரும் தெலுங்கானா பிரச்சனையை பற்றி படிக்கும் போது எனக்கு தோன்றிய கேள்விகள்:

தனி மாநிலம் கோர தலைவர்கள் கூறும் காரணங்கள் :

அ) தங்கள் உரிமைகளை ஒடுக்கப்பட்டுள்ளன,
ஆ) தங்கள் வேலை வாய்ப்புகள் பரிக்கப்பட்டுள்ளன,
இ) தங்கள் கலச்சாரம் சிதைந்து போகின்றது என்றும்
ஈ) தங்கள் வாழ்க்கை நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை

என்று சொன்னாலும்...
தலைவர்கள் கொள்ளையடிக்கை இன்னொரு தனி மாநிலம் அமைப்பதாகவே எனக்கு தோன்றுகிறது...

எப்படி இருந்தாலும் தெலுங்கானாவில் உள்ள ஒவ்வொரு நபரும் எந்த ஒரு தலைவரையும் பின்பற்றாமல் தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் என்று எடுத்துக்கொண்டால்..

இவர்களது தனி மாநில கோரிக்கை - தனி நாடு கோரிக்கையில் இருந்து எந்த விதத்தில் வேறுபடுகிறது...??

தன் சமூகத்தையும் / தன் நலனையும் கருத்தில் கொண்டு போராடும் இவர்கள்.. ஏன் தனி மாநிலத்திற்காக மட்டும் போராட வேண்டும்.??

எந்த காரணத்தினால் இவர்கள் தனி நாட்டிற்காக போராட மறுக்கின்றனர்?
இல்லை..
இன்று தனி மாநிலத்திற்கு போராடும் இவர்கள் , தனி நாட்டிற்க்காக போராட எத்தனை நாட்கள்/வருடங்கள் பிடிக்கும்??

எனக்கு ஏனோ... இப்போராட்டம் தலைவர்களின் சுயநலத்திற்க்காக மட்டுமே நடத்தப்படுவதாக தோன்றுகிறது...

தனி மனித உரிமையின் அடிபடையில் இது அமைந்திருந்தால்..
இது தனி நாடு கோரிக்கையாக அமைந்திருக்கும் என்பதே என் கருத்து..

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ராக்கெட் சிங் - அப்துல் கலாம்

கதாநாயகன் - கதாநாயகி டூயட்..
எப்போதும் கத்திக்கொண்டே இருக்கும் வில்லன்..
அதி புத்திசாலியான கதாநாயகன்..
2 கோடி செலவில் பாடல் காட்சி..
பெரிய புகழ் பெற்ற நடிகர்கள்..

இவை ஏதும் இன்றி...

ஒரு படம் வெற்றி பெற முடியும் என்பதிற்கு ஒரு எடுத்துக்காட்டு
"ராக்கெட் சிங் - சேல்ஸ்மேன் ஆஃப் தி இயர்"

எடுத்துக்கொண்ட கதையை உண்மையான முறையில் சித்தரித்த ராக்கெட் சிங்.. இன்றைய மிகைப்படுத்தப்பட்ட இந்தி சினிமாவில் இருந்து விலக நிர்க்கப்போவது என்பது உறுதி...

படத்தின் கதை மிக எளியது..
கல்லூரி படிப்பு முடித்து வேலை செய்யும் கனவோடு வரும் இளைஞன் ,எப்படி தடைகள்/பொய்கள் கடந்து உண்மையான முறையில் தனது கனவை அடைகிறான் என்பது தான் கதை...

ஒரு வரியில் - இந்தியாவில் "மைக்கல் டேல்" ஒரு சீக்கியராக பிறந்திருந்தால்??

நடித்த அணைவரும் தங்கள் கதாபாத்திரங்களை அருமையாக செய்துள்ளனர்..இவர்களை இதற்கு முன் படங்களில் பார்த்த ஞாபகம் இல்லை...

அலுவகத்தில் எப்போதும் இணையத்தில் அறைக்குறை பெண்களின் படத்தை பார்க்கும் - டி.சந்தோஷ்
எப்போதும் தனக்கு கீழ் வேலை பார்ப்போரை வாட்டிவதைக்கும் அதிகாரி - நவீன் கெளசிக்
எல்லோரும் "ஐடம்" என்று அழைக்கும் வரவேற்பாளர் - கோஹர் கான்
"கப்-பிளேட்" என்று தன்னை அழைப்பதை வெறுக்கும் பணியாளர் - முகேஷ் பட்
இவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தின் உரிமையாளராக - மனிஷ் செளதிரி.

இவர்கள் மிக தேர்ந்த நடிகர்களாக மின்னுகின்றனர்..

இப்படத்தின் உண்மையான கதாநாயகர்கள்..

இயக்குனர் - ஷிமித் அமின் மற்றும் .
கதை / திரைக்கதை எழுத்தாளர் - ஜெய்தீப் சாஹ்னி

ஷிமித் அமின் இதற்கு முன் அளித்த "சக் தே" நமக்கு ஞாபகம் இருக்கலாம்..இனி வரும் காலத்தில் எனது எதிர்ப்பார்ப்பை அதிக படுத்தும் இயக்குனர் பட்டியலில் இவரும் சேர்ந்துக்கொண்டார்..

ஜெய்தீப் சாஹ்னி - இப்படத்தின் முக்கிய நபர் - இதற்கு முன் எழுதிய "கோசலா கா கொஷலா" , "சக் தே" தொடர்ந்து இப்படத்தின் மூலம் நடுத்தர மக்களின் வாழ்க்கையை வெற்றி பெற செய்திருக்கிறார்..

இவரது கதைகள் நாம் ஆராய்ந்து பார்த்தால்..கரு ஒன்று தான்..
"How the Underdog wins"
எப்படி "ஒடுக்கப்பட்ட மனிதர்கள் வெற்றி அடைவது"
மற்றொரு முக்கியமான ... அஸ்திரம்.."கனவு"
இதனால் இக்கதைகளை..
"ஒடுக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் கனவுகளை அடைவது" என்று நாம் புரிந்துக்கொள்ளலாம்..
ஒரு வரியில் இவரது கதையின் கருவை சுருக்கினாலும்..
இவரது கதை/திரைக்கதைக்கும் புதிய பரிமாணம் தருவது.. இவரது "களம்"
நடுத்தர குடும்பத்தின் தினசரி வாழ்க்கையில் பின்னிபிணையும் கனவு , வெற்றி இவரது கதைகளை பெரும்பாலானோர் ரசிக்கும்படி செய்துள்ளது..

என்றாவது படங்களை இயக்கும் மிதப்பில் இருப்பவர்கள்...இவரது கதைகள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது..
"நடுத்தர வாழ்க்கை / ஒருப்படாதவர்கள் / ஒடுக்கப்பட்டவர்கள்"
"கனவு"
"போராட்டம்"
"உழைப்பு"
"வெற்றி"

என்னை பொருத்தவரையில்..

ராக்கெட் சிங் - அப்துல் கலாமின் உண்மையான பிரதிநிதி!!
Rocket Singh - Brand Ambassador for "the dream machine - Adbul Kalaam"


வியாழன், 10 டிசம்பர், 2009

மரணப்போட்டி!!

மரணப்போட்டி!!

இந்த காணொளி கண்டு இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்..


திங்கள், 7 டிசம்பர், 2009

பென்னி லாவா!!

"பெண்ணின் மனதை தொட்டு" படத்தில் இடம் பெற்ற "கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ" பாடல் நமது நினைவில் இருக்கலாம்...

ஆனால் இந்த பாடல் உலக அளவில் ரசிக்கப்படுகின்றது...

பிரபு தேவாவவையும் ... ஸ்.ஏ.ராஜ்குமாரையும்... உலக அளவில் அடையாளம் காட்டிய இந்த பாடலையும் அதன் பிற வடிவங்களையும் கண்டு ரசிப்பீராக... :-)

உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி... மக்களை ஒன்று சேர்த்த.. இந்த பாடலை.. இந்த நூற்றாண்டின் சிறந்த தமிழ் பாடலாக... தேர்வு செய்யலாம்... :-D






























முடியல... நீங்களே கூகுள் பண்ணுங்க..
இந்த பாட்ட இவ்வளவு நேரம் கேட்டு ஒரே தலைவலி..:-)

சுருக்கமா.. சொல்லனும்னா..
இந்தியாவின் அணு ஆயுதங்களை விட..
மிக சக்திவாய்ந்தது..
இந்த "பென்னி லாவா"!!!

:-D

கனவு காணும் வாழ்க்கை யாவும்




கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

பிறக்கின்ற போதே...
பிறக்கின்ற போதே...
இறக்கின்ற தேதி..
இருக்கின்றதென்பது..
மெய் தானே...

ஆசைகள் என்ன..
ஆசைகள் என்ன..
ஆணவம் என்ன..
உறவுகள் என்பதும்
பொய் தானே

உடம்பு என்பது..
உடம்பு என்பது..
உண்மையில் என்ன..??
கனவுகள் வாங்கும் பை தானே!!

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

துடுப்பு கூட பாரம் என்று..
கரையை தேடும் ஓடங்கள்..

காலங்கள் மாறும்.
காலங்கள் மாறும்.
கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்..

தூக்கத்தில் பாதி..
ஏக்கத்தில் பாதி..
தூக்கத்தில் பாதி..
ஏக்கத்தில் பாதி..
போனது போக..
எது மீதம்..

பேதை மனிதனே
பேதை மனிதனே
கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

துடுப்பு கூட பாரம் என்று..
கரையை தேடும் ஓடங்கள்..

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

பேசப்படாது!!



நிலை
சமுதாயத்தில் பெண்ணின் நிலை!!


தவம்
இத்தனை ஆண்டுகள்
உன் கண்களின் வினாக்கள் என் தூக்கம் பறித்தன
உன் கூந்தலின் விடுகதைகளில் என் வரிகள் சிக்கின.. 
உன் புன் முறுவலின் சந்தோஷத்தில் என் மனமும் குதித்தது..


இன்றும் உன் ஓர் சொல் வார்த்தைக்காக...தவத்தில் நான்!


பேசப்படாது
பேசப்படாது.. 
கேட்கக்கூடாது
சொல்லமுடியாது..
திரிக்கமுடியாது...
சத்தமில்லை..
முத்தமில்லை


உதடுகள் சேர்ந்திடாமல்..!!


ஜனநாயகம்
ஜனநாயகம்


சுதந்திரம்
எழுத்துரிமை 
பேச்சுரிமை 
நீதி
நேர்மை


இவை யாவும் ..
அரசியல் கட்சியில் உள்ளவருக்கு மட்டும்!!


பேசப்படாது
கலவி
கல்வி
மதம்
ஜாதி
தலித்
ஐய்யர்
முஸ்லிம்
இந்து
ராமர்
பெண்ணியம்
ஆதிமுக
திமுக
லஞ்சம்
வாக்குறுதி
மோசடி
விசாரணை கமிஷன்
தேர்தல் கமிஷன்

ஓட்டு எண்ணிக்கை
கலைஞர் குடும்பம்
தமிழ் கலாசாரம்
இலங்கை தமிழர்
தமிழர் படுகொலை
புலிகள்
ஈழம்
புத்த குருக்கள்
கிரிஸ்து
கடவுள்


பேசப்படாது!!
தமிழர் தவிக்கும் தமிழ் நாட்டில்!! 

சனி, 5 டிசம்பர், 2009

இரு விரல்கள்

பிறந்த சில நாட்கள்..
உள்ளங்கையுடன் ஒன்றாயிருந்த..விரல்கள்..

காலப்போக்கில் தனியே பிரிந்தன.
தன்னை பற்றி மட்டும் சிந்தித்து வந்தன...

பின்.. ஓர் நாள் இது நிகழ்ந்தது... :-D