Song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Song லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 ஜூன், 2010

தோல்வி நிலையென நினைத்தால்...



தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம் ..
உடைமையும் இழந்தோம்..
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து...
உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம்
விடிந்தும் மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்...
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

உரிமை இழந்தோம் ..
உடைமையும் இழந்தோம்..
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து...
உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா?

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

விடியலுக்கில்லை தூரம் விடிந்தும்
மனதில் இன்னும் ஏன் பாரம்?
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்...
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?

யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்..
கொள்கை சாகலாமா?

உரிமை இழந்தோம் ..
உடைமையும் இழந்தோம்..
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து...
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும்
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்..
கொள்கை சாகலாமா?

வெள்ளி, 8 ஜனவரி, 2010

ஓரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது

புதுப்பேட்டை!!
It all comes down to this!!
யுவனின் சிறந்த இசையில் நா.முத்துக்குமாரின் அற்புதமான வரிகள்!






ஓரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது..
மறு நாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது,
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்..
அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூ பூக்கும்!!
ஓ! ஓ! ஓ!
கருவாசல் விட்ட வந்த நாள் தொட்டு,
ஓ! ஓ! ஓ!
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓ! ஓ! ஓ!
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓ! ஓ! ஓ!
கண் மூடிக்கொண்டால்..

போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்.

தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து கப்பலில் காத்திருப்போம்
எறிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்..
ஓ! ஓ! ஓ!
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓ! ஓ! ஓ!
இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓ! ஓ! ஓ!
மனம் வெட்டவெளியிலே அலைகிறதே
ஓ! ஓ! ஓ!
அந்த கடவுளை கண்டால்...

அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் எனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்

பழிபோடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று நாமும் சேர்த்து நடித்திருப்போம்..
ஓ! ஓ! ஓ!
பல முகங்கள் வேண்டும், சரி மாட்டிக்கொள்வோம்
ஓ! ஓ! ஓ!
பல திருப்பம் தெரியும் , அதில் திரும்பிக்கொள்வோம்
ஓ! ஓ! ஓ!
கதை முடியும் போக்கில், அதை முடித்துக்கொள்வோம்
ஓ! ஓ! ஓ!
மறுபிறவி வேண்டுமா??

திங்கள், 7 டிசம்பர், 2009

பென்னி லாவா!!

"பெண்ணின் மனதை தொட்டு" படத்தில் இடம் பெற்ற "கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ" பாடல் நமது நினைவில் இருக்கலாம்...

ஆனால் இந்த பாடல் உலக அளவில் ரசிக்கப்படுகின்றது...

பிரபு தேவாவவையும் ... ஸ்.ஏ.ராஜ்குமாரையும்... உலக அளவில் அடையாளம் காட்டிய இந்த பாடலையும் அதன் பிற வடிவங்களையும் கண்டு ரசிப்பீராக... :-)

உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி... மக்களை ஒன்று சேர்த்த.. இந்த பாடலை.. இந்த நூற்றாண்டின் சிறந்த தமிழ் பாடலாக... தேர்வு செய்யலாம்... :-D






























முடியல... நீங்களே கூகுள் பண்ணுங்க..
இந்த பாட்ட இவ்வளவு நேரம் கேட்டு ஒரே தலைவலி..:-)

சுருக்கமா.. சொல்லனும்னா..
இந்தியாவின் அணு ஆயுதங்களை விட..
மிக சக்திவாய்ந்தது..
இந்த "பென்னி லாவா"!!!

:-D

ஞாயிறு, 22 நவம்பர், 2009

வருடத்தின் சிறந்த "ராக்" பாடல்

இந்த வருடத்தின் சிறந்த ராக் பாடல், கடந்த 17ஆம் தேதி வெளியிடபட்டது..
இது இசை பிரியர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது..
அதுவும் "Them Crooked Vultures" குழுவின் முதல் பாடல் தொகுப்பு என்பது குறிப்பிடதக்கது.



இதேப்போல் இந்த வருடத்தின் சிறந்த நேரடி பாடல் நிகழ்ச்சி , "Faith No More" குழு மெக்ஸிகோ சிட்டியில் சென்ற வாரம் நடத்திய நிகழ்ச்சி என்று கூறுகின்றனர் இசை பண்டிதர்கள்.


செவ்வாய், 3 நவம்பர், 2009

கணினியின் முதல் பாடல்

கணினி பாடிய முதல் பாடல்!!