திங்கள், 14 டிசம்பர், 2009

மாநிலம் Vs. நாடு

நடந்து வரும் தெலுங்கானா பிரச்சனையை பற்றி படிக்கும் போது எனக்கு தோன்றிய கேள்விகள்:

தனி மாநிலம் கோர தலைவர்கள் கூறும் காரணங்கள் :

அ) தங்கள் உரிமைகளை ஒடுக்கப்பட்டுள்ளன,
ஆ) தங்கள் வேலை வாய்ப்புகள் பரிக்கப்பட்டுள்ளன,
இ) தங்கள் கலச்சாரம் சிதைந்து போகின்றது என்றும்
ஈ) தங்கள் வாழ்க்கை நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை

என்று சொன்னாலும்...
தலைவர்கள் கொள்ளையடிக்கை இன்னொரு தனி மாநிலம் அமைப்பதாகவே எனக்கு தோன்றுகிறது...

எப்படி இருந்தாலும் தெலுங்கானாவில் உள்ள ஒவ்வொரு நபரும் எந்த ஒரு தலைவரையும் பின்பற்றாமல் தங்கள் உரிமைக்காக போராடுகிறார்கள் என்று எடுத்துக்கொண்டால்..

இவர்களது தனி மாநில கோரிக்கை - தனி நாடு கோரிக்கையில் இருந்து எந்த விதத்தில் வேறுபடுகிறது...??

தன் சமூகத்தையும் / தன் நலனையும் கருத்தில் கொண்டு போராடும் இவர்கள்.. ஏன் தனி மாநிலத்திற்காக மட்டும் போராட வேண்டும்.??

எந்த காரணத்தினால் இவர்கள் தனி நாட்டிற்காக போராட மறுக்கின்றனர்?
இல்லை..
இன்று தனி மாநிலத்திற்கு போராடும் இவர்கள் , தனி நாட்டிற்க்காக போராட எத்தனை நாட்கள்/வருடங்கள் பிடிக்கும்??

எனக்கு ஏனோ... இப்போராட்டம் தலைவர்களின் சுயநலத்திற்க்காக மட்டுமே நடத்தப்படுவதாக தோன்றுகிறது...

தனி மனித உரிமையின் அடிபடையில் இது அமைந்திருந்தால்..
இது தனி நாடு கோரிக்கையாக அமைந்திருக்கும் என்பதே என் கருத்து..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக