தமிழ் படங்களுக்கு மணி கட்ட வந்து விட்டது ஒரு படம்..
ஆங்கிலத்தில் "ஹாட் சாட்ஸ்" படங்களின் வரிசையில்...தமிழ் திரையில் முதன்முதலாக வந்துவிட்டது.. முழுக்க முழுக்க கலாய்க்கும்... ஸ்பூஃப் (Spoof) படம்..
இந்த படத்தின் பாடல்களும்/மாதிரி காட்சிகளும் சில தினங்களுக்கு முன் வெளியிடபட்டது...
பாடல் 1 - "பச்ச மஞ்சள் ஒயிட் ரோஸ் தமிழன் நான்"
இளைய தளபதி முதல் சின்ன சூப்பர் ஸ்டார் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை .. இந்த பாடலில்.
இந்த பாடல் படத்தில் இடம் பெற்றால் "இளைய தளபதி" வருத்தப்படப் போவது.. என்பது உறுதி.. :-D
லொள்ளு சபாவில் விஜயை கலாய்த்த "போக்கிரி - பேக்கிரி" விட.. இந்த பாடல் ஒரு படி மேல் போகிறது...இதை கேட்டு.. சிரிக்காமல் இருக்க முடியாது
"2011 நம்ம கையில..
சந்திப்போம்டா தோழா நம்ம சட்டசபையில"
இந்த பாடலின் "பஞ்ச்" உங்களுக்கு பாடலின் நோக்கத்தை உங்களுக்கு புரிய வைத்திருக்கும்..
பாடல் 2 - "ஓ மஹா சியான்"
இந்த பாடல் எழுதியர் நிச்சயம் பெரும் புலவராகத்தான் இருக்கவேண்டும்..
இது வரை..
"ரண்டக" , "ஹசிலிபிசிலி" ,"ஓ மஹா சியான்", "டைலாமோ", "பலேலக்கா" போன்ற வார்த்தைகள் தமிழா? தெலுங்கா? இந்தியா? என்ற குழப்பித்திற்கு உண்மையான விடை அழிக்கிறது இந்த பாடல்..
தமிழ் சினிமாவில் மாபெரும் மைல் கல்லாக இதை நாம் கருதலாம்... :-D
பாடல் 3 - "ஒரு சூறாவளி"
இந்த பாடல் நம்ம தலைவர்.. "சிவாஜி தி பாஸ்" படத்தில் ஒரு ரூபாய் வைத்துக்கொண்டு சிங்கமாய் புறப்படும் காட்சியை அடிதளமாக கொண்டு அமைக்கபட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.. இது வரை இந்த படத்தின் "படங்கள்" இதையே காட்டுகின்றன..
பாடல் 4 - குத்து விளக்கு
குத்து பாடல்கள் இல்லையேல் தமிழ் படங்கள் இல்லையேல் என்பதை விளக்குவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்..
"குத்து விளக்கு .. குத்து விளக்கு ..
நான் ஒரு குடும்ப குத்து விளக்கு"
:-)
சூப்பர்..
பாடல் 5 - தமிழ் படம் தீம்
"No Logic
No Logic
Too Much.
Too Much.
முடியல
கடவுளே
தாங்கல..
ஓவரு..
"
இது தான் இந்த பாடலின் வரிகள்..
இது அணைத்தும் இன்றைய தமிழ் படங்களுக்கு மிக பொருந்தும் ஒன்று..
இந்த உண்மையை இன்னொரு படம் சொல்ல போவதை நம் சினிமாகாரர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை பார்க்க ஆர்வமாயுள்ளேன்..
இதற்கு முன் இதைப்போல வந்த "மகாநடிகன்" படத்தை திரைக்கலைஞர்கள் புறக்கணித்தது நம் நினைவில் இருக்கலாம்...
அதற்கு முன்
"கிட்டத்தட்ட 80-களின் இறுதியில் டி.டி-1 தொலைகாட்சியில் ஞாயிறு காலை தொடராக வந்தது. அப்போது தமிழ் சினிமா தாய்மார்கள் மற்றும் பாமரர்களின் கையில் இறுக்கமாக மாட்டிக்கொண்டிருந்த சமயம். எனவே லாஜிக் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு அபத்தங்களின் கலவையாக திரையில் மயக்கிக்கொண்டு இருந்தது தமிழின் வணிகரீதியான சினிமா. இந்த நாடகம் மூலம் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்களை நாடி வந்த தயாரிப்பாளர்களையும், சினிமா ரசிகர்களையும் ஏமாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த கதாசிரியர்களை ஒரு பிடி பிடித்து இருந்தார் சோ"
இதுவும் திரைக்கலைஞர்களை கோபமடைய செய்தது..
திரைக்கலைஞர்கள் "போலீஸ், அரசியல்வாதி,பத்திரிக்கையாளர்" என்று யாரையும் விட்டுவைக்காமல் கிண்டலடிப்பார்கள்.. ஆனால் அவர்களை பற்றி கிண்டலடித்தால் மட்டும் அவர்கள் கோபப்படுவதேன்?"
தமிழ் படம் என்ற பூனைக்கு..
இன்னொரு பூனையே மணி கட்டும் முயற்சி தான் இந்த "தமிழ் படம்" :-D
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 26 டிசம்பர், 2009
சனி, 19 டிசம்பர், 2009
அவதார் 3D
இன்று திரைக்கு வந்த.. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் (3D) படம் பார்க்க நேர்ந்தது..
கதை எப்போதும் போல உலகை காப்பற்ற கதாநாயகன் எடுக்கும் முயற்சிகள் தான்... ஆனால் அவன் காக்க நினைக்கும் உலகின் பெயர் .. "பண்டோரா"
இந்தி படமான "நமக்ஹராம்" படத்தின் கதையை பெரும் பொருட்செலவில் எடுத்தாக நினைத்து கொள்ளலாம்...
தெரிந்த கதையாக இருப்பினும் , நம்மை பிரம்மிக்க வைப்பது இதன் அனிமேஷன்.. நம்மை ஒரு புது உலகிற்கு கொண்டு போவது என்பதை யாராலும் மறுக்க முடியாது..கடந்த பத்து வருடங்களில் வெளியான மிகச்சிறந்த அனிமேஷன் படமாக நான் இதை கருதுகிறேன்..
மனிதர்களால் இப்படி கற்பனை செய்ய முடியுமா.. என்பது போல அமைந்த காட்சிகள் ஏறாளமாய் உள்ளன... இதனை குழந்தைகள்... தங்கள்
தலைமுறையின் "Star Wars" என்று நிச்சயம் கருதுவார்கள்..
ஆயிரத்தில் ஒருவன் கதையில் எம்.ஜி.ஆர் ஒரு தனி நாட்டிற்காக போராடினால் எப்படி இருந்திருக்கோம் அது போல வீர வசனம் பேசி தலைவர் மகளை காதலித்து, பின் தன்னை ஏற்ற மக்களுக்காக போராடும் நம் கதாநாயகன்...அவதார் .. நிஜ(மனித) முகம் மறந்து போவது என்பது உறுதி..
கூகுள் செய்து பார்த்தில்.. இவர் நடத்தி சில படங்கள் நமக்கு தெரியவந்தது...அனிமேஷனுக்கு முக்கியதுவம் உள்ள இப்படத்தில் மனித முகங்கள் தங்கள் தீய குணம் காட்ட மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன..
படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணம் இரண்டு பேர் - ஜான் லாண்டோ , ஜேம்ஸ் காமரூன்
இப்படம் எடுத்த முறையே (Virtual Production) திரைப்பட வரலாற்றை மாற்ற வாய்ப்புகள் உண்டு..
இதை பற்றி இதன் தயாரிப்பாளர் கூறியது .. கீழுள்ள காணொளியில் உள்ளது..
ஜேம்ஸ் காமரூன் - எழுதிய , இயக்கிய இப்படம் அவரின் டைடானிக் சாதனையை முறியடிக்கும்..
இந்த மனிதரை பாராட்ட வேண்டியது கதைகாக அல்ல... எடுத்துக்கொண்ட கதையை எந்த முறையில் கற்பனை செய்த விதத்துக்காக.. இப்படியும் யோசிக்க முடியுமா நம்மை ஆச்சரிய பட வைப்பதற்காக... மனிதனின் கற்பனை எல்லையை மேலும் ஒரு 100 மைல்கள் உயர்த்தியதற்காக..இந்த வருடத்தின் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை (கோல்டன் குலோப்) இவர் வாங்கப்போவது உறுதி!! குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!!
பல 3D படங்கள் இதற்கு முன் பார்த்ததுண்டு.. ஆனால் இம்முறை நான் பார்த்தது.. என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தது..
இப்படத்தை குழந்தைகளுடன் சென்று 3Dயில் பார்க்குமாறு பரிந்துரைப்பேன்
கதை எப்போதும் போல உலகை காப்பற்ற கதாநாயகன் எடுக்கும் முயற்சிகள் தான்... ஆனால் அவன் காக்க நினைக்கும் உலகின் பெயர் .. "பண்டோரா"
இந்தி படமான "நமக்ஹராம்" படத்தின் கதையை பெரும் பொருட்செலவில் எடுத்தாக நினைத்து கொள்ளலாம்...
தெரிந்த கதையாக இருப்பினும் , நம்மை பிரம்மிக்க வைப்பது இதன் அனிமேஷன்.. நம்மை ஒரு புது உலகிற்கு கொண்டு போவது என்பதை யாராலும் மறுக்க முடியாது..கடந்த பத்து வருடங்களில் வெளியான மிகச்சிறந்த அனிமேஷன் படமாக நான் இதை கருதுகிறேன்..
மனிதர்களால் இப்படி கற்பனை செய்ய முடியுமா.. என்பது போல அமைந்த காட்சிகள் ஏறாளமாய் உள்ளன... இதனை குழந்தைகள்... தங்கள்
தலைமுறையின் "Star Wars" என்று நிச்சயம் கருதுவார்கள்..
ஆயிரத்தில் ஒருவன் கதையில் எம்.ஜி.ஆர் ஒரு தனி நாட்டிற்காக போராடினால் எப்படி இருந்திருக்கோம் அது போல வீர வசனம் பேசி தலைவர் மகளை காதலித்து, பின் தன்னை ஏற்ற மக்களுக்காக போராடும் நம் கதாநாயகன்...அவதார் .. நிஜ(மனித) முகம் மறந்து போவது என்பது உறுதி..
கூகுள் செய்து பார்த்தில்.. இவர் நடத்தி சில படங்கள் நமக்கு தெரியவந்தது...அனிமேஷனுக்கு முக்கியதுவம் உள்ள இப்படத்தில் மனித முகங்கள் தங்கள் தீய குணம் காட்ட மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன..
படத்தின் முக்கிய வெற்றிக்கு காரணம் இரண்டு பேர் - ஜான் லாண்டோ , ஜேம்ஸ் காமரூன்
இப்படம் எடுத்த முறையே (Virtual Production) திரைப்பட வரலாற்றை மாற்ற வாய்ப்புகள் உண்டு..
இதை பற்றி இதன் தயாரிப்பாளர் கூறியது .. கீழுள்ள காணொளியில் உள்ளது..
ஜேம்ஸ் காமரூன் - எழுதிய , இயக்கிய இப்படம் அவரின் டைடானிக் சாதனையை முறியடிக்கும்..
இந்த மனிதரை பாராட்ட வேண்டியது கதைகாக அல்ல... எடுத்துக்கொண்ட கதையை எந்த முறையில் கற்பனை செய்த விதத்துக்காக.. இப்படியும் யோசிக்க முடியுமா நம்மை ஆச்சரிய பட வைப்பதற்காக... மனிதனின் கற்பனை எல்லையை மேலும் ஒரு 100 மைல்கள் உயர்த்தியதற்காக..இந்த வருடத்தின் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை (கோல்டன் குலோப்) இவர் வாங்கப்போவது உறுதி!! குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!!
பல 3D படங்கள் இதற்கு முன் பார்த்ததுண்டு.. ஆனால் இம்முறை நான் பார்த்தது.. என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தது..
இப்படத்தை குழந்தைகளுடன் சென்று 3Dயில் பார்க்குமாறு பரிந்துரைப்பேன்
ஞாயிறு, 13 டிசம்பர், 2009
ராக்கெட் சிங் - அப்துல் கலாம்
கதாநாயகன் - கதாநாயகி டூயட்..
எப்போதும் கத்திக்கொண்டே இருக்கும் வில்லன்..
அதி புத்திசாலியான கதாநாயகன்..
2 கோடி செலவில் பாடல் காட்சி..
பெரிய புகழ் பெற்ற நடிகர்கள்..
இவை ஏதும் இன்றி...
ஒரு படம் வெற்றி பெற முடியும் என்பதிற்கு ஒரு எடுத்துக்காட்டு
"ராக்கெட் சிங் - சேல்ஸ்மேன் ஆஃப் தி இயர்"
எடுத்துக்கொண்ட கதையை உண்மையான முறையில் சித்தரித்த ராக்கெட் சிங்.. இன்றைய மிகைப்படுத்தப்பட்ட இந்தி சினிமாவில் இருந்து விலக நிர்க்கப்போவது என்பது உறுதி...
படத்தின் கதை மிக எளியது..
கல்லூரி படிப்பு முடித்து வேலை செய்யும் கனவோடு வரும் இளைஞன் ,எப்படி தடைகள்/பொய்கள் கடந்து உண்மையான முறையில் தனது கனவை அடைகிறான் என்பது தான் கதை...
ஒரு வரியில் - இந்தியாவில் "மைக்கல் டேல்" ஒரு சீக்கியராக பிறந்திருந்தால்??
நடித்த அணைவரும் தங்கள் கதாபாத்திரங்களை அருமையாக செய்துள்ளனர்..இவர்களை இதற்கு முன் படங்களில் பார்த்த ஞாபகம் இல்லை...
அலுவகத்தில் எப்போதும் இணையத்தில் அறைக்குறை பெண்களின் படத்தை பார்க்கும் - டி.சந்தோஷ்
எப்போதும் தனக்கு கீழ் வேலை பார்ப்போரை வாட்டிவதைக்கும் அதிகாரி - நவீன் கெளசிக்
எல்லோரும் "ஐடம்" என்று அழைக்கும் வரவேற்பாளர் - கோஹர் கான்
"கப்-பிளேட்" என்று தன்னை அழைப்பதை வெறுக்கும் பணியாளர் - முகேஷ் பட்
இவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தின் உரிமையாளராக - மனிஷ் செளதிரி.
இவர்கள் மிக தேர்ந்த நடிகர்களாக மின்னுகின்றனர்..
இப்படத்தின் உண்மையான கதாநாயகர்கள்..
இயக்குனர் - ஷிமித் அமின் மற்றும் .
கதை / திரைக்கதை எழுத்தாளர் - ஜெய்தீப் சாஹ்னி
ஷிமித் அமின் இதற்கு முன் அளித்த "சக் தே" நமக்கு ஞாபகம் இருக்கலாம்..இனி வரும் காலத்தில் எனது எதிர்ப்பார்ப்பை அதிக படுத்தும் இயக்குனர் பட்டியலில் இவரும் சேர்ந்துக்கொண்டார்..
ஜெய்தீப் சாஹ்னி - இப்படத்தின் முக்கிய நபர் - இதற்கு முன் எழுதிய "கோசலா கா கொஷலா" , "சக் தே" தொடர்ந்து இப்படத்தின் மூலம் நடுத்தர மக்களின் வாழ்க்கையை வெற்றி பெற செய்திருக்கிறார்..
இவரது கதைகள் நாம் ஆராய்ந்து பார்த்தால்..கரு ஒன்று தான்..
"How the Underdog wins"
எப்படி "ஒடுக்கப்பட்ட மனிதர்கள் வெற்றி அடைவது"
மற்றொரு முக்கியமான ... அஸ்திரம்.."கனவு"
இதனால் இக்கதைகளை..
"ஒடுக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் கனவுகளை அடைவது" என்று நாம் புரிந்துக்கொள்ளலாம்..
ஒரு வரியில் இவரது கதையின் கருவை சுருக்கினாலும்..
இவரது கதை/திரைக்கதைக்கும் புதிய பரிமாணம் தருவது.. இவரது "களம்"
நடுத்தர குடும்பத்தின் தினசரி வாழ்க்கையில் பின்னிபிணையும் கனவு , வெற்றி இவரது கதைகளை பெரும்பாலானோர் ரசிக்கும்படி செய்துள்ளது..
என்றாவது படங்களை இயக்கும் மிதப்பில் இருப்பவர்கள்...இவரது கதைகள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது..
"நடுத்தர வாழ்க்கை / ஒருப்படாதவர்கள் / ஒடுக்கப்பட்டவர்கள்"
"கனவு"
"போராட்டம்"
"உழைப்பு"
"வெற்றி"
என்னை பொருத்தவரையில்..
ராக்கெட் சிங் - அப்துல் கலாமின் உண்மையான பிரதிநிதி!!
Rocket Singh - Brand Ambassador for "the dream machine - Adbul Kalaam"
எப்போதும் கத்திக்கொண்டே இருக்கும் வில்லன்..
அதி புத்திசாலியான கதாநாயகன்..
2 கோடி செலவில் பாடல் காட்சி..
பெரிய புகழ் பெற்ற நடிகர்கள்..
இவை ஏதும் இன்றி...
ஒரு படம் வெற்றி பெற முடியும் என்பதிற்கு ஒரு எடுத்துக்காட்டு
"ராக்கெட் சிங் - சேல்ஸ்மேன் ஆஃப் தி இயர்"
எடுத்துக்கொண்ட கதையை உண்மையான முறையில் சித்தரித்த ராக்கெட் சிங்.. இன்றைய மிகைப்படுத்தப்பட்ட இந்தி சினிமாவில் இருந்து விலக நிர்க்கப்போவது என்பது உறுதி...
படத்தின் கதை மிக எளியது..
கல்லூரி படிப்பு முடித்து வேலை செய்யும் கனவோடு வரும் இளைஞன் ,எப்படி தடைகள்/பொய்கள் கடந்து உண்மையான முறையில் தனது கனவை அடைகிறான் என்பது தான் கதை...
ஒரு வரியில் - இந்தியாவில் "மைக்கல் டேல்" ஒரு சீக்கியராக பிறந்திருந்தால்??
நடித்த அணைவரும் தங்கள் கதாபாத்திரங்களை அருமையாக செய்துள்ளனர்..இவர்களை இதற்கு முன் படங்களில் பார்த்த ஞாபகம் இல்லை...
அலுவகத்தில் எப்போதும் இணையத்தில் அறைக்குறை பெண்களின் படத்தை பார்க்கும் - டி.சந்தோஷ்
எப்போதும் தனக்கு கீழ் வேலை பார்ப்போரை வாட்டிவதைக்கும் அதிகாரி - நவீன் கெளசிக்
எல்லோரும் "ஐடம்" என்று அழைக்கும் வரவேற்பாளர் - கோஹர் கான்
"கப்-பிளேட்" என்று தன்னை அழைப்பதை வெறுக்கும் பணியாளர் - முகேஷ் பட்
இவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தின் உரிமையாளராக - மனிஷ் செளதிரி.
இவர்கள் மிக தேர்ந்த நடிகர்களாக மின்னுகின்றனர்..
இப்படத்தின் உண்மையான கதாநாயகர்கள்..
இயக்குனர் - ஷிமித் அமின் மற்றும் .
கதை / திரைக்கதை எழுத்தாளர் - ஜெய்தீப் சாஹ்னி
ஷிமித் அமின் இதற்கு முன் அளித்த "சக் தே" நமக்கு ஞாபகம் இருக்கலாம்..இனி வரும் காலத்தில் எனது எதிர்ப்பார்ப்பை அதிக படுத்தும் இயக்குனர் பட்டியலில் இவரும் சேர்ந்துக்கொண்டார்..
ஜெய்தீப் சாஹ்னி - இப்படத்தின் முக்கிய நபர் - இதற்கு முன் எழுதிய "கோசலா கா கொஷலா" , "சக் தே" தொடர்ந்து இப்படத்தின் மூலம் நடுத்தர மக்களின் வாழ்க்கையை வெற்றி பெற செய்திருக்கிறார்..
இவரது கதைகள் நாம் ஆராய்ந்து பார்த்தால்..கரு ஒன்று தான்..
"How the Underdog wins"
எப்படி "ஒடுக்கப்பட்ட மனிதர்கள் வெற்றி அடைவது"
மற்றொரு முக்கியமான ... அஸ்திரம்.."கனவு"
இதனால் இக்கதைகளை..
"ஒடுக்கப்பட்ட மனிதர்கள் தங்கள் கனவுகளை அடைவது" என்று நாம் புரிந்துக்கொள்ளலாம்..
ஒரு வரியில் இவரது கதையின் கருவை சுருக்கினாலும்..
இவரது கதை/திரைக்கதைக்கும் புதிய பரிமாணம் தருவது.. இவரது "களம்"
நடுத்தர குடும்பத்தின் தினசரி வாழ்க்கையில் பின்னிபிணையும் கனவு , வெற்றி இவரது கதைகளை பெரும்பாலானோர் ரசிக்கும்படி செய்துள்ளது..
என்றாவது படங்களை இயக்கும் மிதப்பில் இருப்பவர்கள்...இவரது கதைகள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியது..
"நடுத்தர வாழ்க்கை / ஒருப்படாதவர்கள் / ஒடுக்கப்பட்டவர்கள்"
"கனவு"
"போராட்டம்"
"உழைப்பு"
"வெற்றி"
என்னை பொருத்தவரையில்..
ராக்கெட் சிங் - அப்துல் கலாமின் உண்மையான பிரதிநிதி!!
Rocket Singh - Brand Ambassador for "the dream machine - Adbul Kalaam"
லேபிள்கள்:
அப்துல் கலாம்,
தமிழ்,
திரைப்படம்,
ராக்கெட் சிங்,
விமர்சனம்,
Adbul Kalaam,
Review,
Rocket Singh
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


