புதன், 17 ஜூன், 2009

இனிதே தொடக்கம்!!

ஈ-மெயில்  மூலம்

இன்று முதல் .. பதிவுகள் இனிதே தொடக்கம்…

 

 


வியாழன், 26 மார்ச், 2009

முட்டை உடைக்க சிறந்த வழி!!

முட்டை உடைக்க சிறந்த வழி!!

:-D


செவ்வாய், 24 மார்ச், 2009

டபுள் டச் ஹாலிடே க்ளாசிக்

டபுள் டச் ஹாலிடே க்ளாசிக்


புதன், 18 மார்ச், 2009

இந்திய சூப்பர்மேன்

இந்திய சூப்பர்மேன்... :-D
குறிப்பாக சொல்ல வேண்டுமானால்...."தெலுங்கு" சூப்பர்மேன்.. :-D


செவ்வாய், 17 மார்ச், 2009

மிகச் சிறிய கவிதைகள்

மிகச் சிறிய கவிதைகள்

அம்மா!

-----------------

காதல்

-----------------

இதயம்

-----------------

அவள்!!

-----------------

புன்சிரிப்பு

-----------------

கூந்தல்

-----------------

விழிகள்

-----------------

சுண்டுவிரல்

-----------------

நாய்குட்டி

-----------------

பூ

-----------------

மொஸார்ட்

-----------------

பஞ்சுமிட்டாய்

-----------------

கடற்க்காற்று...

-----------------

கடலை..:-)

-----------------

வெண்ணிலவு

-----------------

மழை

-----------------

கண்ணீர்....

-----------------

"?" வாழ்க்கை

------------------

பாரதி

------------------

சுதந்திரம்

------------------

தாய்மண்

------------------

தமிழ்


நான் கடவுள்

கடவுள் மனிதன் படைத்தான்?

மனிதன் கடவுள் படைத்தான்?

----------------

"நான்" கடவுள்..எனும் மனிதன்"

நான்" மனிதன்.. எனும் கடவுள்:-)

----------------

கடவுளின் பிறப்பிடம்

முதலில் தேடிய மனித மனம்..

----------------

கடவுள் படைத்தான்..

"நான்" என்றான் மனிதன்

கடவுள் மறைந்தான்..

---------------

"நான்"

மனமா?

உடலா?

கற்பனையா?

--------------

"நான்" - மாயை

"நீ" - மாயை...

நீ இன்றி நான் இல்லை - நிஜம்..

--------------

இறைவா..உனை நோக்கி நான்..

"நான்" தொலைந்த பின்..

--------------

கடவுளின் வருத்தம்

தன்னை இன்றும் புரிந்துக்கொள்ளாத

மனிதனை எண்ணி..

மனிதனின் வருத்தம்

தன்னை இன்றும் புரிந்துக்கொள்ளாத

கடவுளை எண்ணி..

---------------

புத்தகங்களில். மட்டுமே..கடவுள்

கோவில்களில். மட்டுமே..கடவுள்

புகைப்படங்களில். மட்டுமே..கடவுள்

சிலைகளில். மட்டுமே..கடவுள்

சுருக்கமாக சிறை எடுத்தான் "இல்லாத" கடவுளை ...

---------------

"நான்" , "கடவுள்" பொருளற்றவை..

"நான் கடவுள்"பொருளென்ன?


இரக்கமற்ற எண்கள்

மருத்துவமனை மீது குண்டுவீச்சு: 11 பேர் பலி

இதை படித்த போது நான் முன்பு எழுதிய சில வரிகள் ஞாபகம் வந்தன...

"Train crash death toll rises to 71"
Zimbabwe Death Toll Rises as Human Rights Watch Blames Army

இச்செய்திகள் "மரணத்தை" மட்டும் சொல்பவையல்ல...

எண்களுக்கு நடுவே துலைந்துப்போன மனிதர்களையும் நினைவு படுத்துபவை தான்..

ஆம் ..சில நேரங்களில் ,எண்கள் சாமானிய மனிதருக்கு இரக்கம் காட்டுவதில்லை...

பெயர்களை மறைத்து,
முகங்கள் மறைத்து,
மனிதனாகிட அவன் போராடிய நாட்களை மறைத்து,
சிறிய வெற்றிகளை மறைத்து,
சின்னச் சின்ன சந்தோஷங்களை...மறைத்து,
குடும்ப சூழ்நிலை மறைத்து,
அவனை வழியனுப்பி வைத்த பிஞ்சி விரல்களை மறைத்து,
வாழ்வின் சிறிய மகிழ்ச்சிகளை மறைத்து,
வெரும் ... கருப்பு நிற மைய்யில்..,
எண்ணிக்கையின்.. ஒரு பகுதியாக்குவது,
எந்த விதத்தில்... நியாயமாகும்...

"உலகம் போரப்போக்கில்.. இது எல்லாம் சகஜமப்பா... எவனுக்கும் கவலயில்லை" என்று பலரும் சொல்லும் போது...

"சரி .. இந்த .. எண்ணிக்கையில்...உங்கள் நெருங்கிய உறவினர் அடக்கம் என்றால்..என்ன செய்வீர்கள்... " என்று கேட்டால்....

"என்ன பண்ண முடியும்... படிச்சிட்டு.. ரெண்டு துளி கண்ணீர் சிந்திட்டு....அடுத்த காரியத்தப் பார்க்க வேண்டியது தான்.." என்று பதில்...வருகிறது....