செவ்வாய், 8 செப்டம்பர், 2009
கனவு முடியும் இடம்
வாழ்வெனும் கனவிலிருந்து எழுந்தவர்களில்...
நான்..
வாழ்வின் கனவு காண மறுத்தவர்களில்...
நான்..
வாழ்வில் கனவை தொலைத்த பலரில்..நான்...
கனவு .. நான்....நிஜம்??
திங்கள், 24 ஆகஸ்ட், 2009
மக்கள் - நாடு - நிஜம்!
மக்கள் நிஜமா?
அல்லது
நாடு நிஜமா?
மக்கள் இன்றி நாடு இல்லை...
நாடு இன்றி மக்கள் உண்டு...
எல்லா மனித இனமும் ஒன்று என்று கூறினால்..
நாடுகள் ஏன்??
நாடுகளின் பெயரால் போர்கள் எதற்கு?
மக்கள் உயிர் குடிக்கும் நாடு தேவை தானா?
வெரும் கொடுகள் என்று நாம் நம்மை ஏமாற்றிக்கொண்டாலும்..
எல்லைகளும் , பிரிவினையுமே எப்போதும் மனிதன் வாழ்வை தீர்மானிக்கின்றன..
இதை ஏற்று கொள்ள நாம் மருப்பது ஏன்?
ஏற்றத்தாழ்வு விரும்பாத மனிதர்களாய்.. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதேன்?
நம் ஒவ்வொரு சிந்தனையிலும் ...
பிரிவினை ஒளிந்திருப்பது தான் நிஜம்!!
இதுவே மனிதனின் இயற்கை குணமா??
மனிதன் என்று சொல்லி
நாம் பிற உயிரினங்களிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
சாதி பெயர் சொல்லி..
நாம் பிற சாதியினரிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
தமிழன் என்று..
நாம் பிற இனத்தவரிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
தென்இந்தியன் என்று..
நாம் வட இந்தியரிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
இந்தியன் என்று
நாம் பிற நாட்டவரிலிருந்து வேறுபட ஆசைப்படிகிறோம்!
இப்படி..
ஒவ்வொரு படியிலும் பிரிவினை வளர்க்க ..
நாடுகளும்.. கொடுகளும் உதவுகின்றன..
இதுவே நிஜம்!
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009
புயல்
என்..புயல் வாழ்க்கையில்...
காற்றில்..மிதந்த ..பூ
அவள்..
புயலை மறந்தேன்...!!
பூவை பார்த்த நொடி!!
லேபிள்கள்:
கவிதை,
கனவில் நிஜம்,
தமிழ்,
புயல்,
Kanavil Nijam,
Kavidhai,
Puyal
தெரு விளக்கு
வாழ்நாள் முழுதும்...
ஓர் இடம் நின்று...
வாழ வழிக்காட்டும்..
தெரு விளக்குகள்...
ஆசிரியர்கள்.
லேபிள்கள்:
கனவில் நிஜம்,
செய்தி,
தமிழ்,
தெரு விளக்கு
செவ்வாய், 28 ஜூலை, 2009
அரசியல்
கடமையை விலைபேசியது..
காசைக் கடவுளாக்கியது
கடவுளைப் பிரிவாக்கியது
பிரிவை ஓட்டுக்களாக்கியது..
காட்டைக் கட்டான் தரையாக்கியது..
விளை நிலங்களை வீட்டு மனைகளாக்கியது
வீட்டைக் "கட்சி" உடன்பிறப்புகளால் நிரப்பியது...
நாட்டைக் கவலைகிடமாக்கியது.
அரசியல்
நான் தமிழன்!
26 வருடங்கள்...
உண்ண உணவின்றி..
குடிக்க நீரின்றி..
தங்க இடமின்றி..
சொந்தங்கள் ஏதுமின்றி..
இன்று வரை..
பதுங்கு குழியே எங்கள் உறவினன்..
நடைப்போடும் கால்களே எங்கள் நன்பன்..
இன்று தப்பி பிழைப்பதுவே எங்கள் லட்சியம்..
நாளை சுவாசிப்பது மட்டுமே எங்கள் கனவு..
இன்றும்..என்னை சுற்றி..
எப்போதும்.. அரசியல் நாடகங்கள்.
எப்போதும்.. குற்றச்சாட்டுகள்..
எப்போதும்.. பழிச்சொற்கள்..
எப்போதும்.. ஏமாந்தவன் என்கின்ற பட்டம்..
இதை அனைத்தும் மீறி..
வாழ்ந்து காட்டுவேன்..
வென்று காட்டுவேன்..
நான் தமிழன்!!
புதன், 17 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
