ஞாயிறு, 11 டிசம்பர், 2011
கண்ணாடி. .முன்னாடி.. எது??
ஒவ்வொரு முறையும்
கண்ணாடியில் முகம் பார்க்கும் பொழுது தோன்றுவது !!!
என்னை போல் தோற்றம் கொண்டு கண்ணாடி உலகில் வாழ்பவன் நிஜமா?
நான் அவனது பிம்பமா? யார் நிஜம் - யார் பிம்பம்??
முகம் பார்க்க தோன்றும் போது மட்டும் நாங்கள் சந்தித்துக்கொள்வது ஏன்?
திடீரென ஒரு நாள், எங்களில் ஒருவர் கண்ணாடி முன் / பின் தோன்றாவிட்டால் மற்றவரின் நிலை தான் என்ன??
ஒருவேளை எங்களில் ஒருவர் அழகாய் இருந்து மற்றொருவர் அழகற்றவராய் இருந்திருந்தால், இருவரின் வாழ்க்கை தான் எப்படி மாறியிருக்கும்??
பொய் என்னும் உலகிலேயே வாழ்ந்து இருப்போம் இருவரும்...
நாம் தினம் தினம் முகம் பார்த்து ரசிக்கும் கண்ணாடிகள்...
வேறு உலகின்... கதவுகளாகவும்.... ஜன்னல்களாகவும்..இருந்திருந்தால்???..
நிஜம்..
பிம்பம்...
எது நான்?
கண்ணாடி. .முன்னாடி.. எது??
லேபிள்கள்:
கண்ணாடி,
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
முன்னாடி,
Kanavil Nijam,
Mirror,
Tamil
திங்கள், 24 அக்டோபர், 2011
நிழல்
நான்:
காலை முதல் மாலை வரை
சில நேரம் என்னை பின் தொடர்ந்து.....
சில நேரம் என்னை வழி நடத்தி....
ஒரு பொழுதும் என்னை விட்டு பிரியா ... என் நிழல்..நண்பா..
இரவில் மட்டும் ... நீ எங்கே ?
நிழல்:
நாள் முழுதும்.... உன் உருவத்தில்.. அடைப்பட்ட நான்...
பரந்து ...விரிந்தேன்..
உனக்கு இரவை கொடுத்தேன்....
நாள் முழுதும்... நான் உன் காலடியில்..
இரவு.. முழுதும்... நீ என் காலடியில்...
காலை முதல் மாலை வரை
சில நேரம் என்னை பின் தொடர்ந்து.....
சில நேரம் என்னை வழி நடத்தி....
ஒரு பொழுதும் என்னை விட்டு பிரியா ... என் நிழல்..நண்பா..
இரவில் மட்டும் ... நீ எங்கே ?
நிழல்:
நாள் முழுதும்.... உன் உருவத்தில்.. அடைப்பட்ட நான்...
பரந்து ...விரிந்தேன்..
உனக்கு இரவை கொடுத்தேன்....
நாள் முழுதும்... நான் உன் காலடியில்..
இரவு.. முழுதும்... நீ என் காலடியில்...
சனி, 22 அக்டோபர், 2011
உனக்கென மட்டும்
உனக்கென மட்டும் கண்கள் விழித்ததடி.
உனக்கென மட்டும் வார்த்தை தொலைந்ததடி..
உனக்கென மட்டும் வாழ்க்கை ருசித்ததடி..
ஆம்..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி,
இன்னும்...... மயக்கம் என்ன?
உனக்கென மட்டும் வார்த்தை தொலைந்ததடி..
உனக்கென மட்டும் வாழ்க்கை ருசித்ததடி..
ஆம்..
உனக்கென மட்டும் வாழும் இதயமடி,
இன்னும்...... மயக்கம் என்ன?
லேபிள்கள்:
உனக்கென மட்டும்,
கனவில் நிஜம்,
தமிழ்,
பாடல்,
Mayakkam enna,
Tamil
திங்கள், 17 அக்டோபர், 2011
கூரை , நான் , கொசு வலை
ஓர் கூரை
ஓர் கூரையின் கீழ் வாழ்வதென்பதன்
உண்மையான அர்த்தம்...
கவலையில்லை
வீட்டை பூட்டினோமா என்ற கவலையில்லை..
மாடியில் காய வைத்த வத்தல் கவலையில்லை...
எடுக்க மறந்த குடை கவலையில்லை...
என் கவலை ....
இந்த மழை முடியும் வரை... என் கூரை தாங்குமா?
என் கவலை...
இந்த மழை முடியும் வரை... என் குடும்பம் பசி தாங்குமா?
மற்றும் நான்
நாளை சைக்கிள் ஓட்டத் தேவையானவை
சைக்கிள் மற்றும் உயிருடன் நான்!!
சொத்து
என் தாத்தா விட்டு சென்ற ஓரே சொத்து...
என் தாத்தாவிடம் கூட்டி செல்கிறது..
என் வீடு
என் வீட்டுச் சுவர்களை நான் பார்த்தில்லை...
என் வீட்டு நட்சத்திர கூரையை தொட்டதில்லை...
இவ்வளவு பெரிய வீடு இருந்தும்...
கொசு வலை கட்டும் போது மட்டும் சற்று சிரமப்படுகிறேன்...
கொசு வலை
தினம் தினம் பல நூறு கொசுக்கள்
தங்கள் குழந்தைகளை கூட்டி செல்லும்..
மனிதக்காட்சி சாலை....
கொசு வலை
இரையே வலை விரிக்கும் விசித்திரம்
லேபிள்கள்:
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
புகைப்படங்கள்,
Kanavil Nijam,
Tamil,
thoughts
புதன், 12 அக்டோபர், 2011
இரவில்லா நாட்கள்
கனவு ஏது
உறக்கம் ஏது..
ஓய்வு ஏது...
இரவில்லா நாட்களான ... வாழ்விலே..
ஓட்டம் உண்டு
ஏக்கம் உண்டு..
கோபம் உண்டு...
இரவில்லா நாட்களான ... வாழ்விலே..
தான் மட்டும்..
பணம் மட்டும்
பொய் மட்டும்..
இரவில்லா நாட்களான ... வாழ்விலே..
வலி கொஞ்சம்..
பழி கொஞ்சம்
பாவம் கொஞ்சம்..
இரவில்லா நாட்களான ... வாழ்விலே..
நிலவு வேண்டும்..
குளிர்க்காற்று வேண்டும்
இருளும் வேண்டும்..
இரவில்லா நாட்களான ... வாழ்விலே..
உறக்கம் ஏது..
ஓய்வு ஏது...
இரவில்லா நாட்களான ... வாழ்விலே..
ஓட்டம் உண்டு
ஏக்கம் உண்டு..
கோபம் உண்டு...
இரவில்லா நாட்களான ... வாழ்விலே..
தான் மட்டும்..
பணம் மட்டும்
பொய் மட்டும்..
இரவில்லா நாட்களான ... வாழ்விலே..
வலி கொஞ்சம்..
பழி கொஞ்சம்
பாவம் கொஞ்சம்..
இரவில்லா நாட்களான ... வாழ்விலே..
நிலவு வேண்டும்..
குளிர்க்காற்று வேண்டும்
இருளும் வேண்டும்..
இரவில்லா நாட்களான ... வாழ்விலே..
லேபிள்கள்:
இரவில்லா நாட்கள்,
கவிதை,
கனவில் நிஜம்,
தமிழ்,
Kanavil Nijam,
Tamil
போதும் ... போதாது
போதாது என்றால் ...
எதுவும் போதாது தான்..
போதும்.. என்றால்
செலவுகள் குறையும்
கனவுகள் மறையும்..
ஏக்கங்கள் தீரும்...
நிம்மதி வளரும்...
வாழ்க்கை ஓரிடத்தில் நின்றபடி ஓடும்...
போதும் என்பதா.... போதாது என்பதா??
இந்த குழப்பம் தான் - மனிதனோ??
எதுவும் போதாது தான்..
போதும்.. என்றால்
செலவுகள் குறையும்
கனவுகள் மறையும்..
ஏக்கங்கள் தீரும்...
நிம்மதி வளரும்...
வாழ்க்கை ஓரிடத்தில் நின்றபடி ஓடும்...
போதும் என்பதா.... போதாது என்பதா??
இந்த குழப்பம் தான் - மனிதனோ??
லேபிள்கள்:
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
போதாது,
போதும்,
Kanavil Nijam,
Thought
ஞாயிறு, 18 செப்டம்பர், 2011
மாற்றம்
"நீ சுத்தமா மாறிட்ட"
இது பாராட்டா? அல்லது விமர்சனமா?
நாம்..
உருவத்தில், செயலில் , சிந்தனையில்...
மாற்றத்தை ஏற்க மறுப்பது ஏன்?
தன்னுடைய மாற்றத்தை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளும் மனிதன்..
தன்னை சுற்றி உள்ள மனிதரின்
மாற்றத்தை ஏற்க மறுப்பது ஏன்?
இது எப்படி இருந்தாலும்...
மாற்றம் ஏற்க மறுக்கும்
மனிதனின் விசித்திரமும் மாறும்,
மாற்றம் ஒன்றே நிரந்திரம்..
இது பாராட்டா? அல்லது விமர்சனமா?
நாம்..
உருவத்தில், செயலில் , சிந்தனையில்...
மாற்றத்தை ஏற்க மறுப்பது ஏன்?
தன்னுடைய மாற்றத்தை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளும் மனிதன்..
தன்னை சுற்றி உள்ள மனிதரின்
மாற்றத்தை ஏற்க மறுப்பது ஏன்?
இது எப்படி இருந்தாலும்...
மாற்றம் ஏற்க மறுக்கும்
மனிதனின் விசித்திரமும் மாறும்,
மாற்றம் ஒன்றே நிரந்திரம்..
லேபிள்கள்:
கனவில் நிஜம்,
சிந்தனை,
தமிழ்,
மாற்றம்,
Kanavil Nijam,
Tamil
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




