திங்கள், 10 ஜனவரி, 2011

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!


ஆனந்த விகடனில் வெளியான .... நாஞ்சில் நாடன் பேட்டியின் ஒரு பகுதி....


''சினிமா மட்டும்தான் தமிழ் கலாசாரத்துக்கு அபாயமானதா என்ன?''
''கலாசாரம் என்பது எப்போதும் நிலையான ஒன்று இல்லை. அது மாறிக்கொண்டே இருப்பது. ஆனால், மரபைக் கணக்கில் எடுக்காத கலாசார மாற்றம் பாழ். அற மதிப்பீடுகளும் ஒழுக்க விழுமியங்களும்தான் ஒரு பண்பாட்டின் வேர்கள். தமிழ் சினிமாதான் தமிழ் சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. தமிழ் சமூகம் அளவுக்குச் சினிமாவின் கேடுகளை உள்வாங்கிக்கொண்ட சமூகம் வேறு எதுவும் கிடையாது. அதுபோக, அரசியலும் ஊடகமும் கல்வியும் நம் சமூகத்தை நாசம் செய்துகொண்டு இருக்கின்றன. கறிக்கோழியை வளர்ப்பதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெற்றோர்களிடம் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பிராய்லர் கோழியை வளர்ப்பதைப்போல பிள்ளைகளை வளர்த்தால், அந்தச் சமூகம் எப்படி உருப்படும்? படிப்பு, வேலை இதைத் தவிர, மனித வாழ்க்கைக்கு அர்த்தங்களே இல்லையா? குறிக் கோள்களே இல்லையா? நமது சமூகம் எப்படி மதிப்பீடுகளை இழந்துகிடக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் எனக்கு பி.எஸ்.என்.எல்லில் இருந்து ஒருதொலை பேசி அழைப்பு. எடுத்துப் பேசினால், 'ஹாய், மச்சான் சௌக்கியமா?’ என்றது. அது ஒரு பதிவு செய்யப்பட்ட குரல். எதிர்முனையில் இருப்பவர் யார்?  எழுத்தாளரா, கொலைகாரரா, ஆசிரியரா, நோய்வாய்ப்பட்டவரா, அவருக்கு என்ன வயது இருக்கும் என்று எந்தக் குறைந்த பட்ச அறிவும் இல்லாமல் கூவுகிற வியாபாரக் குரல்கள் என்னை இம்சை செய்கின்றன!''

''இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே?''

''உண்மைதான். தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம். ஆனால், இப்போது உள்ள மாணவர்களோ, 'மானாட மயிலாட’ பார்ப்பதற்குச் செலவழிக்கும் மணித் துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு, இன்று எந்தத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதிகூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள். நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?
இன்று ஸ்பெக்ட்ரமில்  1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம். ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன்.

எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

கடைசி கடிதம் எப்போது??

என் தாய் தந்தைக்கு... கைப்பட எழுதிய சில வரிகள்..  
வாழ்வில் முதல் முறை புத்தாண்டு வாழ்த்தின் அர்த்தம் உணர்ந்தேன்...

நீங்கள் கடைசி முறை கைப்பட கடிதம் எழுதியது எப்போது??

வெள்ளி, 31 டிசம்பர், 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புது வருடம் ..... 2011
புதிய தினங்கள்...
புதிய சிந்தனைகள்.....
புதிய தேடல்கள்....
புதிய முயற்சிகள்.....
புதிய அனுபவங்கள்.....
புதிய வெற்றிகள்...

உங்கள் வாழ்வில் மலர ...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

வியாழன், 23 டிசம்பர், 2010

மீண்டும் வெங்காயம்

வெங்காய விலை பற்றி பெரியாரிடம் தான் கேட்க வேண்டும்: கருணாநிதி

வெங்காயத்தின் ஏற்றத்தால்... மட்டுமே
பெரியாரை நினைவுகோரும் கருணாநிதி...

:-D

இது ...பிரென்ச் புரட்சிக்கு முன் ராணி மேரி..
"பிரெட் இல்லையென்றால் கேக் சாப்பிடட்டும்" .. என்றது போல் உள்ளது..

ஆனால்

இலவச டி.வி , அரிசி , ஓயின் ஷாப் மற்றும் ஓட்டு போட பணம் இருக்கும் வரை ...
தமிழகமும் / தமிழர்களும் புரட்சி புஸ்வானங்கள் தான் :-)
  

புதன், 22 டிசம்பர், 2010

வெங்காயம்

"போடா வெங்காயம்"
என்று எள்ளி நகையாடினர்...

"முடிந்தால் என்னை ருசித்துப்பார்"
என்று.. வெங்காயம்... உயர பறந்தது...

:-D


வெங்காயம் - கிலோ ரூ.100 - மக்கள் அவதி!



புதன், 8 டிசம்பர், 2010

மெளனம்


எதையும் தாங்கும் இதயம் ...
உன் மெளனத்தின் பாரத்தால் நொறுங்கும்..வரை.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

உடல் உயிர்



உடல் - உயிர் இதில் நிஜம் எது?
உடலின்றி உயிரின் பலன் என்ன?
உயிரின்றி உடலின் பொருள் என்ன்?

சில நாட்கள்..
உடல்களின் துணை மட்டும்..நிஜம்
சில நாட்கள்..
உயிர் மேல் ஆசை மட்டுமே ... நிஜம்
பல நாட்கள்..
உடல் - உயிர் மறப்போம்

வாழ்க்கையெனும் கனவில்..