ஞாயிறு, 2 ஜனவரி, 2011

கடைசி கடிதம் எப்போது??

என் தாய் தந்தைக்கு... கைப்பட எழுதிய சில வரிகள்..  
வாழ்வில் முதல் முறை புத்தாண்டு வாழ்த்தின் அர்த்தம் உணர்ந்தேன்...

நீங்கள் கடைசி முறை கைப்பட கடிதம் எழுதியது எப்போது??

வெள்ளி, 31 டிசம்பர், 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புது வருடம் ..... 2011
புதிய தினங்கள்...
புதிய சிந்தனைகள்.....
புதிய தேடல்கள்....
புதிய முயற்சிகள்.....
புதிய அனுபவங்கள்.....
புதிய வெற்றிகள்...

உங்கள் வாழ்வில் மலர ...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

வியாழன், 23 டிசம்பர், 2010

மீண்டும் வெங்காயம்

வெங்காய விலை பற்றி பெரியாரிடம் தான் கேட்க வேண்டும்: கருணாநிதி

வெங்காயத்தின் ஏற்றத்தால்... மட்டுமே
பெரியாரை நினைவுகோரும் கருணாநிதி...

:-D

இது ...பிரென்ச் புரட்சிக்கு முன் ராணி மேரி..
"பிரெட் இல்லையென்றால் கேக் சாப்பிடட்டும்" .. என்றது போல் உள்ளது..

ஆனால்

இலவச டி.வி , அரிசி , ஓயின் ஷாப் மற்றும் ஓட்டு போட பணம் இருக்கும் வரை ...
தமிழகமும் / தமிழர்களும் புரட்சி புஸ்வானங்கள் தான் :-)
  

புதன், 22 டிசம்பர், 2010

வெங்காயம்

"போடா வெங்காயம்"
என்று எள்ளி நகையாடினர்...

"முடிந்தால் என்னை ருசித்துப்பார்"
என்று.. வெங்காயம்... உயர பறந்தது...

:-D


வெங்காயம் - கிலோ ரூ.100 - மக்கள் அவதி!



புதன், 8 டிசம்பர், 2010

மெளனம்


எதையும் தாங்கும் இதயம் ...
உன் மெளனத்தின் பாரத்தால் நொறுங்கும்..வரை.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

உடல் உயிர்



உடல் - உயிர் இதில் நிஜம் எது?
உடலின்றி உயிரின் பலன் என்ன?
உயிரின்றி உடலின் பொருள் என்ன்?

சில நாட்கள்..
உடல்களின் துணை மட்டும்..நிஜம்
சில நாட்கள்..
உயிர் மேல் ஆசை மட்டுமே ... நிஜம்
பல நாட்கள்..
உடல் - உயிர் மறப்போம்

வாழ்க்கையெனும் கனவில்..

சனி, 10 ஜூலை, 2010

சரி... நீங்கள் சொல்ல நினைப்பது தான் என்ன?

Pakistan suicide blasts in Mohmand 'kill more than 100'
Iraq suicide bomb attack kills five
8 injured in train derailment following blast in NE India

மேல் உள்ள தலைப்பு செய்திகளில் ஓர் ஒற்றுமை - இவையாவிலும் பலியானவர்கள் எல்லோரும் உன்னை - என்னை போன்ற...சராசரி மனிதர்கள்.

ஓர் சராசரி மனிதனின் உயிரை கொன்று இவர்கள் சொல்ல நினைப்பது தான் என்ன?
அரசாங்கத்தை / அதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தில் ஏன் சராசரி மனிதனே பலியாகிறான்?

சராசரி மனிதனின் உயிரை ஓட்டு எண்ணிக்கையாக மட்டும் கருதும் அரசாங்கத்தின் / அரசியல்வாதிகளின் மனதில் இந்த உயிர் பலிகள் என்ன மாற்றத்தை கொண்டு வரப்போவதாக எண்ணுகிறார்க்ள்??

முகம் தெரியாத அரசாங்கம்
பல முகங்கள் கொண்ட "இவர்கள்"
நடுவில்..
முகம் தெரியாதவனின் அக்கறையின்மையில்..
தினம் தினம் "இவர்களின்" பயத்தில்..
கல்லறையை நோக்கி எனது தின வாழ்க்கை...
நான் ஒரு சராசரி மனிதன்..