சனி, 10 ஜூலை, 2010

சரி... நீங்கள் சொல்ல நினைப்பது தான் என்ன?

Pakistan suicide blasts in Mohmand 'kill more than 100'
Iraq suicide bomb attack kills five
8 injured in train derailment following blast in NE India

மேல் உள்ள தலைப்பு செய்திகளில் ஓர் ஒற்றுமை - இவையாவிலும் பலியானவர்கள் எல்லோரும் உன்னை - என்னை போன்ற...சராசரி மனிதர்கள்.

ஓர் சராசரி மனிதனின் உயிரை கொன்று இவர்கள் சொல்ல நினைப்பது தான் என்ன?
அரசாங்கத்தை / அதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தில் ஏன் சராசரி மனிதனே பலியாகிறான்?

சராசரி மனிதனின் உயிரை ஓட்டு எண்ணிக்கையாக மட்டும் கருதும் அரசாங்கத்தின் / அரசியல்வாதிகளின் மனதில் இந்த உயிர் பலிகள் என்ன மாற்றத்தை கொண்டு வரப்போவதாக எண்ணுகிறார்க்ள்??

முகம் தெரியாத அரசாங்கம்
பல முகங்கள் கொண்ட "இவர்கள்"
நடுவில்..
முகம் தெரியாதவனின் அக்கறையின்மையில்..
தினம் தினம் "இவர்களின்" பயத்தில்..
கல்லறையை நோக்கி எனது தின வாழ்க்கை...
நான் ஒரு சராசரி மனிதன்..